• Nov 13 2025

இந்தியா-சீனா இடையே நேரடி விமான சேவை இன்று முதல் ஆரம்பம்!

shanuja / Nov 9th 2025, 4:30 pm
image

ஷாங்காய்-டெல்லி இடையேயான பயணிகள் விமான சேவையை சீனா ஈஸ்டர்ன் நிறுவனம் இன்று(9)  முதல்  ஆரம்பமாகிறது.


கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது.


அதன்பின், லடாக் எல்லைப் பிரச்சனை காரணமாக நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் எழுந்தது.


இதற்கிடையே, அமெரிக்கா உடனான பனிப்போருக்கு மத்தியில் இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.


 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும், சீனஜனாதிபதி ஷிஜின்பிங்கும் சந்தித்துப் பேசியது இதற்கு அடித்தளமாக அமைந்தது.


 இதையடுத்து, இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை விரைவில் தொடங்கும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.


அதன்படி, கொல்கத்தா-குவாங்சூ இடையிலான இண்டிகோ விமான சேவை கடந்த மாதம் தொடங்கியமையும் குறிப்பிடத்தக்கது.


இந்தியா-சீனா இடையே நேரடி விமான சேவை இன்று முதல் ஆரம்பம் ஷாங்காய்-டெல்லி இடையேயான பயணிகள் விமான சேவையை சீனா ஈஸ்டர்ன் நிறுவனம் இன்று(9)  முதல்  ஆரம்பமாகிறது.கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது.அதன்பின், லடாக் எல்லைப் பிரச்சனை காரணமாக நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் எழுந்தது.இதற்கிடையே, அமெரிக்கா உடனான பனிப்போருக்கு மத்தியில் இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும், சீனஜனாதிபதி ஷிஜின்பிங்கும் சந்தித்துப் பேசியது இதற்கு அடித்தளமாக அமைந்தது. இதையடுத்து, இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை விரைவில் தொடங்கும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.அதன்படி, கொல்கத்தா-குவாங்சூ இடையிலான இண்டிகோ விமான சேவை கடந்த மாதம் தொடங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement