திருகோணமலை -கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள உப்பாறு கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின் மீனொன்று இன்று (08) பகல் கரையொதுங்கியுள்ளது.
இந்த டொல்பின் மீனானது சுமார் 5அடி நீளம் கொண்டதாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது எவ்வாறு உயிரிழந்தது என இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை.எனினும் கடலில் இறந்த நிலையில் கரையொதுங்கியிருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கடந்த மாதம் வெருகல் -இலங்கைத்துறை முகத்துவாரம் கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின் மீனொன்று கரையொதுங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இறந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின் திருகோணமலை -கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள உப்பாறு கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின் மீனொன்று இன்று (08) பகல் கரையொதுங்கியுள்ளது.இந்த டொல்பின் மீனானது சுமார் 5அடி நீளம் கொண்டதாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது எவ்வாறு உயிரிழந்தது என இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை.எனினும் கடலில் இறந்த நிலையில் கரையொதுங்கியிருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு கடந்த மாதம் வெருகல் -இலங்கைத்துறை முகத்துவாரம் கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின் மீனொன்று கரையொதுங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.