• Sep 08 2024

மருத்துவர் அர்ச்சுனா பேராதனை வைத்தியசாலைக்கு மருத்துவ அதிகாரியாக மாற்றம்...!

Sharmi / Jul 23rd 2024, 6:19 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா இன்றிலிருந்து பேராதனை வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார்.

அண்மை நாட்களாக சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராக இருந்து மருத்துவர்களது குறைபாடுகள் தொடர்பாகவும், நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை வெளிக்கொணர்ந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் எந்தவித விசாரணைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அத்தியட்சகராக இராமநாதன் அர்ச்சுனா நியமிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு சேவைகளை இலகுபடுத்தியும், வசதிகளை ஏற்படுத்தியும் கொடுத்திருந்த நிலையில் பிரதேச மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்த நிலையில் பேராதனை மருத்துவ மனைக்கு தற்காலிக நியமனம் வழங்கப்பட்டமை மக்கள்  பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்டுள்ள மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா

 சுகாதார அமைச்சு எனது மருத்துவ நிர்வாகத்தை எடுத்துச் சென்று என்னை வைத்திய அதிகாரியாக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு தரமிறக்கிள்ளது. 

இதனால் சுகாதார அமைச்சில் உள்ள குறைபாடுகளை வெளிப்படையாக விவாதித்த ஒருவருக்கு முறையான தண்டனையை நான் உணர்கிறேன்.

மாண்புமிகு ஜனாதிபதி இது பற்றி நன்கு அறிந்திருப்பார் என்றும், இந்த தவறான நடத்தை எதிர்வரும் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்றும் நம்புகிறேன்.

திணைக்கள விசாரணை இன்னும் முடிவடையவில்லை, இரத்தம் தோய்ந்த உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பல தசாப்தங்களாக எமது மக்கள் போராடி வரும் சர்வதேச மட்ட அமைப்பின் மனித உரிமை மீறல் விசாரணைக்கு தேவையான அதே கடிதத்தில் கலாநிதி லால் பனாபிட்டிய கையொப்பமிட்டுள்ளார்.

ஊழலை வெளியில் கொண்டு வந்ததற்காக பரிசு வழங்கப்படுகிறது.

ஊழல் செய்த அனைத்து நபர்களும் இன்னும் பல தசாப்தங்களாக அவர்கள் செய்து வரும் விஷயங்களை மறைத்து வருகின்றனர். ஆனால் உண்மையை உரக்கப் பேசுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார். என்றும் பதிவிட்டுள்ளார்.


மருத்துவர் அர்ச்சுனா பேராதனை வைத்தியசாலைக்கு மருத்துவ அதிகாரியாக மாற்றம். யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா இன்றிலிருந்து பேராதனை வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார்.அண்மை நாட்களாக சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராக இருந்து மருத்துவர்களது குறைபாடுகள் தொடர்பாகவும், நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை வெளிக்கொணர்ந்திருந்தார். இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் எந்தவித விசாரணைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அத்தியட்சகராக இராமநாதன் அர்ச்சுனா நியமிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு சேவைகளை இலகுபடுத்தியும், வசதிகளை ஏற்படுத்தியும் கொடுத்திருந்த நிலையில் பிரதேச மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்த நிலையில் பேராதனை மருத்துவ மனைக்கு தற்காலிக நியமனம் வழங்கப்பட்டமை மக்கள்  பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.இது தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்டுள்ள மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா சுகாதார அமைச்சு எனது மருத்துவ நிர்வாகத்தை எடுத்துச் சென்று என்னை வைத்திய அதிகாரியாக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு தரமிறக்கிள்ளது. இதனால் சுகாதார அமைச்சில் உள்ள குறைபாடுகளை வெளிப்படையாக விவாதித்த ஒருவருக்கு முறையான தண்டனையை நான் உணர்கிறேன்.மாண்புமிகு ஜனாதிபதி இது பற்றி நன்கு அறிந்திருப்பார் என்றும், இந்த தவறான நடத்தை எதிர்வரும் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்றும் நம்புகிறேன்.திணைக்கள விசாரணை இன்னும் முடிவடையவில்லை, இரத்தம் தோய்ந்த உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பல தசாப்தங்களாக எமது மக்கள் போராடி வரும் சர்வதேச மட்ட அமைப்பின் மனித உரிமை மீறல் விசாரணைக்கு தேவையான அதே கடிதத்தில் கலாநிதி லால் பனாபிட்டிய கையொப்பமிட்டுள்ளார்.ஊழலை வெளியில் கொண்டு வந்ததற்காக பரிசு வழங்கப்படுகிறது.ஊழல் செய்த அனைத்து நபர்களும் இன்னும் பல தசாப்தங்களாக அவர்கள் செய்து வரும் விஷயங்களை மறைத்து வருகின்றனர். ஆனால் உண்மையை உரக்கப் பேசுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார். என்றும் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement