பெருமளவான போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் 'டுபாய் அசித' என்பவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் 105 பவுன் தங்கம் மற்றும் பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்கு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் முன்வைத்த ஆதாரங்களை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி
தங்கம்: சுமார் 105 பவுன் எடையுள்ள தங்கம்.
வாகனம்: சுமார் 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேன் ஒன்று.
பணம்: 10 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணம்.
இந்தத் தங்கம் மற்றும் பணம் ஆகியவற்றை 'டுபாய் அசித' தனது பெயரில் வைத்துக்கொள்ளாமல், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காகத் தனது உறவினர்களின் பெயர்களில் கொள்வனவு செய்திருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்களைக் கண்டறியும் விசேட நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் கடத்தல் - டுபாய் அசிதவின் சொத்துக்களை முடக்க உத்தரவு பெருமளவான போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் 'டுபாய் அசித' என்பவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் 105 பவுன் தங்கம் மற்றும் பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்கு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் முன்வைத்த ஆதாரங்களை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவின்படி தங்கம்: சுமார் 105 பவுன் எடையுள்ள தங்கம்.வாகனம்: சுமார் 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேன் ஒன்று.பணம்: 10 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணம்.இந்தத் தங்கம் மற்றும் பணம் ஆகியவற்றை 'டுபாய் அசித' தனது பெயரில் வைத்துக்கொள்ளாமல், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காகத் தனது உறவினர்களின் பெயர்களில் கொள்வனவு செய்திருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்களைக் கண்டறியும் விசேட நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.