• Sep 19 2024

அடுத்த வருடம் முதல் பரீட்சைகள் நடைபெறுவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

Chithra / Sep 16th 2024, 8:35 am
image

Advertisement

 

அடுத்த வருடம் முதல் அனைத்து பரீட்சைகளும் தாமதமின்றி நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த   தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீருடை, பாடப்புத்தகம் என அனைத்தும் இப்போதே தயாராகி விட்டன என்று உத்தரவாதம் தரலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், 2025 ஜனவரி 2 ஆம் திகதி பாடசாலை தவணை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மூன்றாவது தவணை இரண்டு வாரங்களுக்கு நடத்தப்பட வேண்டும்.

அதற்கமைய, ஜனவரி 20ஆம் திகதி முதல் தவணை ஆரம்பமாக உள்ளது.

இந்நிலையில் உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கல்விப் பொதுத் தராதர பரீட்சை பெறுபேறுகளும் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் முதல் பரீட்சைகள் நடைபெறுவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு  அடுத்த வருடம் முதல் அனைத்து பரீட்சைகளும் தாமதமின்றி நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த   தெரிவித்துள்ளார்.அத்துடன் சீருடை, பாடப்புத்தகம் என அனைத்தும் இப்போதே தயாராகி விட்டன என்று உத்தரவாதம் தரலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும், 2025 ஜனவரி 2 ஆம் திகதி பாடசாலை தவணை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், மூன்றாவது தவணை இரண்டு வாரங்களுக்கு நடத்தப்பட வேண்டும்.அதற்கமைய, ஜனவரி 20ஆம் திகதி முதல் தவணை ஆரம்பமாக உள்ளது.இந்நிலையில் உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இதேவேளை கல்விப் பொதுத் தராதர பரீட்சை பெறுபேறுகளும் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement