• Sep 20 2024

யாழில் வீதியில் மயங்கி விழுந்த முதியவர் பரிதாபமாக உயரிழப்பு!

Tamil nila / Aug 1st 2024, 9:25 pm
image

Advertisement

வீதியில் மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கடற்கரை வீதி, ஈச்சமோட்டை, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் வசித்து வந்த க.கியூமர் என என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 27ஆம் திகதி பிறந்தநாள் நிகழ்வு ஒன்றுக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் கடற்கரை வீதியூடாக வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். இதன்போது அவருக்கு திடீரென தலைச்சுற்று ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில் 27ஆம் திகதி இரவு 8 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். தலையில் அடிபட்டதாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

யாழில் வீதியில் மயங்கி விழுந்த முதியவர் பரிதாபமாக உயரிழப்பு வீதியில் மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கடற்கரை வீதி, ஈச்சமோட்டை, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் வசித்து வந்த க.கியூமர் என என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,கடந்த 27ஆம் திகதி பிறந்தநாள் நிகழ்வு ஒன்றுக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் கடற்கரை வீதியூடாக வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். இதன்போது அவருக்கு திடீரென தலைச்சுற்று ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார்.இந்நிலையில் 27ஆம் திகதி இரவு 8 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். தலையில் அடிபட்டதாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement