• Sep 29 2024

பஸ் மோதி வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு!

Tamil nila / Sep 28th 2024, 6:23 am
image

Advertisement

பஸ் மோதி வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கொழும்பு - கண்டி வீதியில் உள்ள அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என்று வரக்காப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று வீதியில் பயணித்த வயோதிபப் பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது படுகாயமடைந்த வயோதிபப் பெண் வரக்காப்பொல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அம்பேபுஸ்ஸ, வரக்காப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய வயோதிபப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பஸ் மோதி வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு பஸ் மோதி வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் கொழும்பு - கண்டி வீதியில் உள்ள அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என்று வரக்காப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று வீதியில் பயணித்த வயோதிபப் பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தின் போது படுகாயமடைந்த வயோதிபப் பெண் வரக்காப்பொல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.அம்பேபுஸ்ஸ, வரக்காப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய வயோதிபப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement