• Sep 08 2024

முட்கிளுவை முள்ளு குத்தியதில் மூதாட்டி உயிரிழப்பு..! யாழில் சம்பவம்

Chithra / Jul 19th 2024, 10:54 am
image

Advertisement

 

யாழ்ப்பாணத்தில் முட்கிளுவை மரத்தின் முள்ளு குத்தியதில் ஏற்பட்ட காயம் காரணமாக மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் - காரைநகர், களபூமி பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய வனித்தேற்கரசி பாலசுப்பிரமணியம்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விறகு சேகரிப்பதற்கு சென்ற போது, முட்கிளுவை மரத்தின் முள்ளு காலில் குத்தியுள்ளது. 

அதனால் ஓரிரு நாட்களில் காலில் வலி ஏற்பட, மூளாய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

முள்ளு குத்திய காயத்தில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உட்கூற்று பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முட்கிளுவை முள்ளு குத்தியதில் மூதாட்டி உயிரிழப்பு. யாழில் சம்பவம்  யாழ்ப்பாணத்தில் முட்கிளுவை மரத்தின் முள்ளு குத்தியதில் ஏற்பட்ட காயம் காரணமாக மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - காரைநகர், களபூமி பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய வனித்தேற்கரசி பாலசுப்பிரமணியம்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் விறகு சேகரிப்பதற்கு சென்ற போது, முட்கிளுவை மரத்தின் முள்ளு காலில் குத்தியுள்ளது. அதனால் ஓரிரு நாட்களில் காலில் வலி ஏற்பட, மூளாய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முள்ளு குத்திய காயத்தில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உட்கூற்று பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement