• Apr 01 2025

யாழில் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபப் பெண் - மோட்டார் சைக்கிள் மோதி மரணம்!

Thansita / Mar 30th 2025, 9:46 pm
image

யாழில் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபப் பெண்ணொருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது 

 யாழ்ப்பாணம் - அரசடி வீதி பகுதியை சேர்ந்த  70 வயதுடைய  பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த பெண் நேற்றையதினம் தட்டாதரு சந்தியூடாக அரசடி வீதிக்கு திரும்ப முயற்சித்துள்ளார். இதன்போது கே.கே.எஸ் வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதியதில் படுகாயமடைந்தார்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

யாழில் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபப் பெண் - மோட்டார் சைக்கிள் மோதி மரணம் யாழில் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபப் பெண்ணொருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது  யாழ்ப்பாணம் - அரசடி வீதி பகுதியை சேர்ந்த  70 வயதுடைய  பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த பெண் நேற்றையதினம் தட்டாதரு சந்தியூடாக அரசடி வீதிக்கு திரும்ப முயற்சித்துள்ளார். இதன்போது கே.கே.எஸ் வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதியதில் படுகாயமடைந்தார்.இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement