கடந்த 21 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் 03 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி, மாத்தறை - கந்தர பொலிஸ் பிரிவின் கபுகம வடக்கு பகுதியில் நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதேநாளில், கண்டி - தலத்துஓயா பொலிஸ் பிரிவின் கஹம்பிலியாவ மாரஸ்ஸன பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளது.
மேலும், களுத்துறை - பேருவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஹெட்டிமுல்ல, மல்பொக்க வீதியில் உள்ளிட்ட சில வீதிகள் சீர்திருத்தப்படுவதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பேருவளை பிரதேச சபையால் இந்த சீர்திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்தது என கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பேருவளை பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் நிலையங்களில் பதிவான தேர்தல் முறைப்பாடுகள் - வெளியான அறிவிப்பு கடந்த 21 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் 03 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.இதன்படி, மாத்தறை - கந்தர பொலிஸ் பிரிவின் கபுகம வடக்கு பகுதியில் நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அதேநாளில், கண்டி - தலத்துஓயா பொலிஸ் பிரிவின் கஹம்பிலியாவ மாரஸ்ஸன பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளது.மேலும், களுத்துறை - பேருவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஹெட்டிமுல்ல, மல்பொக்க வீதியில் உள்ளிட்ட சில வீதிகள் சீர்திருத்தப்படுவதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளது.இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பேருவளை பிரதேச சபையால் இந்த சீர்திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்தது என கூறியுள்ளனர்.சம்பவம் தொடர்பாக பேருவளை பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.