• Apr 26 2026

அதிகாலை உட்புகுந்து குடிசையை தரைமட்டமாக்கிய யானை - மயிரிழையில் உயிர்தப்பிய குடும்பம்

Chithra / Apr 26th 2026, 12:06 pm
image

திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மருதங்குடா கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானை குடும்பமொன்று வசிந்து வந்த தற்காலிக குடிசையை சேதப்படுத்தியுள்ளது.


இதன்போது வீட்டில் காணப்பட்ட உபகரணங்கள் காட்டு யானையால் சேதமாக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் வீட்டில் இருந்த கணவன், கர்ப்பிணியான மனைவி, சிறு குழந்தைகள் தெய்வாதீனமாக மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.


காட்டு யானைகளின் தொல்லைகள் தமது கிராமத்தில் தொடர்ந்தும் காணப்படுவதால் இதற்கு உரிய தீர்வைபெற்றுத்தருமாறு குச்சவெளி - மருதங்குடா கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.   


அதிகாலை உட்புகுந்து குடிசையை தரைமட்டமாக்கிய யானை - மயிரிழையில் உயிர்தப்பிய குடும்பம் திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மருதங்குடா கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானை குடும்பமொன்று வசிந்து வந்த தற்காலிக குடிசையை சேதப்படுத்தியுள்ளது.இதன்போது வீட்டில் காணப்பட்ட உபகரணங்கள் காட்டு யானையால் சேதமாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வீட்டில் இருந்த கணவன், கர்ப்பிணியான மனைவி, சிறு குழந்தைகள் தெய்வாதீனமாக மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.காட்டு யானைகளின் தொல்லைகள் தமது கிராமத்தில் தொடர்ந்தும் காணப்படுவதால் இதற்கு உரிய தீர்வைபெற்றுத்தருமாறு குச்சவெளி - மருதங்குடா கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.   

Advertisement

Advertisement

Advertisement