• Oct 18 2025

அவசர பேரிடர் நிலை அறிவிப்பு; கொழும்புவாழ் மக்களுக்கு எச்சரிக்கை!

Chithra / Oct 16th 2025, 6:48 pm
image


கொழும்பில் இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை அவசர  பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.  

கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான வானிலை முன்னறிவிப்புகளை அடுத்து, கொழும்பு மாநகர சபை  இன்று முதல் 18 ஆம் திகதி வரை அவசரகால அனர்த்த பதில் நடவடிக்கையை அறிவித்துள்ளது.

மாநகர சபை தனது அனர்த்த முகாமைத்துவம் மற்றும் அவசரகால பதில் பிரிவுகள், பாதகமான வானிலையால் பாதிக்கப்படும் குடியிருப்பாளர்களுக்கு உதவுவதற்காக முழுமையாகத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

இதற்காக அவசரகால மீட்பு படையினர் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

வளிமண்டலவியல் திணைக்களத்தின்படி, பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், தற்காலிக வெள்ளப்பெருக்கு மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், தேவைப்பட்டால் உதவிகளுக்காக மாநகர சபையைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசரகால உதவிக்கு, 011-2422222 மற்றும்  011-2686087 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு கொழும்பு வாழ் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


அவசர பேரிடர் நிலை அறிவிப்பு; கொழும்புவாழ் மக்களுக்கு எச்சரிக்கை கொழும்பில் இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை அவசர  பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.  கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான வானிலை முன்னறிவிப்புகளை அடுத்து, கொழும்பு மாநகர சபை  இன்று முதல் 18 ஆம் திகதி வரை அவசரகால அனர்த்த பதில் நடவடிக்கையை அறிவித்துள்ளது.மாநகர சபை தனது அனர்த்த முகாமைத்துவம் மற்றும் அவசரகால பதில் பிரிவுகள், பாதகமான வானிலையால் பாதிக்கப்படும் குடியிருப்பாளர்களுக்கு உதவுவதற்காக முழுமையாகத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.இதற்காக அவசரகால மீட்பு படையினர் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  வளிமண்டலவியல் திணைக்களத்தின்படி, பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், தற்காலிக வெள்ளப்பெருக்கு மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், தேவைப்பட்டால் உதவிகளுக்காக மாநகர சபையைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அவசரகால உதவிக்கு, 011-2422222 மற்றும்  011-2686087 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு கொழும்பு வாழ் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement