• Sep 17 2024

உயிரிழந்த வர்த்தகர்களுக்கு புதுக்குடியிருப்பில் உணர்வுபூர்வமாக அஞ்சலி...!

Sharmi / Jul 10th 2024, 10:17 am
image

Advertisement

கடந்த காலங்களில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்துக்குட்பட்ட பகுதியில் வர்த்தகநடவடிக்கைகளை மேற்கொண்ட உயிரிழந்த வர்த்தகர்களை நினைவு கூர்ந்து புதுக்குடியிருப்பில் இன்று(10) அஞ்சலி நிகழ்வு ஒன்று இடம்பெற்றது  

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பில் வர்த்தகத்தை மேற்கொண்டு கடந்த காலங்களில் பல்வேறு வகையிலும்  உயிரிழந்த வர்த்தகர்களை நினைவு கூர்வுமுகமாக இன்று (10) காலை புதுக்குடியிருப்பு நகரில்  இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.  

இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வர்த்தகத்தை மேற்கொண்டு உயிரிழந்த 15 வர்த்தகர்களின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு அவர்களுக்கான  ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்வில் உயிரிழந்த வர்த்தகர்களின் குடும்பத்தினர் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க நிர்வாக உறுப்பினர்கள் வர்த்தகர்கள்  மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

உயிரிழந்த வர்த்தகர்களுக்கு புதுக்குடியிருப்பில் உணர்வுபூர்வமாக அஞ்சலி. கடந்த காலங்களில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்துக்குட்பட்ட பகுதியில் வர்த்தகநடவடிக்கைகளை மேற்கொண்ட உயிரிழந்த வர்த்தகர்களை நினைவு கூர்ந்து புதுக்குடியிருப்பில் இன்று(10) அஞ்சலி நிகழ்வு ஒன்று இடம்பெற்றது  புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பில் வர்த்தகத்தை மேற்கொண்டு கடந்த காலங்களில் பல்வேறு வகையிலும்  உயிரிழந்த வர்த்தகர்களை நினைவு கூர்வுமுகமாக இன்று (10) காலை புதுக்குடியிருப்பு நகரில்  இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.  இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வர்த்தகத்தை மேற்கொண்டு உயிரிழந்த 15 வர்த்தகர்களின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு அவர்களுக்கான  ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் உயிரிழந்த வர்த்தகர்களின் குடும்பத்தினர் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க நிர்வாக உறுப்பினர்கள் வர்த்தகர்கள்  மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement