• May 01 2024

சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்! எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

Chithra / Mar 8th 2024, 9:25 am
image

Advertisement

 

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தன்னை தாக்க முயன்றதாக இரா. சாணக்கியன் எழுப்பிய சிறப்புரிமை பிரச்சினை குறித்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 சாணக்கியன் பிரதமரைச் சந்திக்கச் சென்ற வேளை, அவர் மீது நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தாக்குதல் நடத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது.

ஆளும் கட்சி எதிர்க்கட்சி என எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், உடல் ரீதியான காயங்களையோ அல்லது தாக்குதலையோ மேற்கொள்ள எந்த உரிமையும் இல்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை சபாநாயகர் தலைமையிலான அதிகாரிகளே பாதுகாக்கின்றமையினால், 

இது குறித்து கவனம் செலுத்தி, அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் இது தொடர்பில் முறையான விசாரணையையும் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை  நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தன்னை தாக்க முயன்றதாக இரா. சாணக்கியன் எழுப்பிய சிறப்புரிமை பிரச்சினை குறித்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சாணக்கியன் பிரதமரைச் சந்திக்கச் சென்ற வேளை, அவர் மீது நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தாக்குதல் நடத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது.ஆளும் கட்சி எதிர்க்கட்சி என எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், உடல் ரீதியான காயங்களையோ அல்லது தாக்குதலையோ மேற்கொள்ள எந்த உரிமையும் இல்லை.நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை சபாநாயகர் தலைமையிலான அதிகாரிகளே பாதுகாக்கின்றமையினால், இது குறித்து கவனம் செலுத்தி, அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் இது தொடர்பில் முறையான விசாரணையையும் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement