• Aug 19 2026

கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த முன்னாள் அமைச்சரின் மனைவி உயிரிழப்பு

Chithra / Aug 19th 2026, 3:11 pm
image


முன்னாள் அமைச்சரும், மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி இன்று (19) காலை உயிரிழந்துள்ளார்.


55 வயதுடைய அவர், இரண்டு பிள்ளைகளின் தாயாராவார்.


தனமல்விலவில் அவர்களுக்குச் சொந்தமான புதிதாகக் கட்டப்பட்ட கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


இதனையடுத்து, காலி கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.


அவரது உடலம் தனமல்விலவில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த முன்னாள் அமைச்சரின் மனைவி உயிரிழப்பு முன்னாள் அமைச்சரும், மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி இன்று (19) காலை உயிரிழந்துள்ளார்.55 வயதுடைய அவர், இரண்டு பிள்ளைகளின் தாயாராவார்.தனமல்விலவில் அவர்களுக்குச் சொந்தமான புதிதாகக் கட்டப்பட்ட கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இதனையடுத்து, காலி கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.அவரது உடலம் தனமல்விலவில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement