• Sep 08 2024

திட்டமிட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள திருமலை மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள்...!அப்துல்லா மஹ்ரூப் குற்றச்சாட்டு...!

Sharmi / Jun 4th 2024, 9:20 am
image

Advertisement

அண்மையில் க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியானபோதும் திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவர்களில் 70 மாணவிகளுக்கு பரீட்சை பெறுபேறு வெளியாகவில்லை இதை திட்டமிட்டு செய்துள்ளார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் நேற்றையதினம்(03) இடம்பெற்ற  ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் சாஹிரா கல்லூரியின்  அதிபர் முகைஸ் அவர்களையும், ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்தி குழு உறுப்பினர்களையும் மாணவர்களின் பரீட்சை பெறு பெறுகள் தொடர்பாக கலந்துரையாடிய போது பரீட்சை மண்டபத்தில் இடம் பெற்ற பல நிகழ்வுகள்  சென்ஜோசப் பரீட்சை மண்டபத்தின் பொருப்பதிகாரி மீதும் ,மூதூரை சேர்ந்த மேலதிக உதவி அதிகாரியின் நடவடிக்கை தொடர்பாகவும் பாரிய ஒரு சந்தேகத்தை எமக்கு உருவாக்கி உள்ளன

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இன்று (03)  திருகோணமலை ஸாஹிரா கல்லூரி அதிபர் முகைஸ், ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்திக் குழு உறுப்பினர்களையும் சந்தித்து, மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக கலந்துரையாடியபோது, பரீட்சை மண்டபத்தில் இடம்பெற்ற பல நிகழ்வுகள், செஞ்ஜோசப் பரீட்சை மண்டபத்தின் பொறுப்பதிகாரி மீதும் மூதூரை சேர்ந்த மேலதிக உதவி அதிகாரியின் நடவடிக்கை குறித்தும் பாரிய சந்தேகத்தை எமக்கு தோற்றுவித்துள்ளது.

திருகோணமலை நகரில் உள்ள பழைமை வாய்ந்த பாடசாலைகளை விட, குறிப்பாக ஸாஹிரா கல்லூரியின் பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில், கடந்த 10 வருட காலமாக குறைந்தபட்சம் 10க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவத்துறையிலும், பொறியியல் துறையிலும் தேர்வாகி வரும் நிலையில், இந்த செயல் கல்லூரி மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே நோக்கப்படுகின்றது.

இம்முறை 04 மாணவிகள் பொறியியல் துறைக்கும், 09க்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவத் துறைக்கும் தெரிவுசெய்யப்படுவார்கள் என்று கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையிலேயே பெறுபேறுகள் வெளியாகாமல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கல்வித் திணைக்களத்தினால், கல்லூரி அதிபருக்கும் 70 மாணவிகளுக்கும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டபோது, மேலதிக பரீட்சை பொறுப்பதிகாரி நடந்துகொண்ட விதம் தொடர்பாக, மாணவிகள் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை குழுவுக்கு முன்வைத்துள்ளனர்.

பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பரீட்சார்த்திகளுக்கு சாப்பிடுவதற்கு கச்சான் வழங்கியதாகவும், பர்தாவும் துப்பட்டாவும் அணிந்திருந்த மாணவிகள் அனைவருக்கும் பரீட்சை பெறுபேறுகள் வெளிவரமாட்டாது என்பதனை, பல சந்தர்ப்பங்களில் பரீட்சை மேலதிக பொருப்பதிகாரி கூறி வந்தமையும், இதனால் பரீட்சையில் தோற்றிய மாணவிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும், கல்வித் திணைக்கள  சட்ட நடவடிக்கை குழு முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார்கள்.

மேலும், கல்வித் திணைக்கள விசாரணை குழுவினர், ஒவ்வொரு மாணவியரும் அவர்களின் வாக்குமூலங்களை எழுதுவதற்கு முன்னர், திருமலை வலயக் கல்விப் பணிமனையைச் சேர்ந்த சிலர் அவர்கள் சொல்வதை முதலில் எழுதச் சொன்னார்கள். அதன் பின்னர், வாக்குமூலம் எழுத்துமூலம் கொடுக்கப்பட்ட நிலையில், வலயக் கல்விப் பணிமனையைச் சேர்ந்தவர்கள் அவர்கள் கூறுவதையே முடிவாக எழுதச்சொல்லி மாணவிகளை பணித்திருக்கிறார்கள். பின்னர், ‘ஒவ்வொருவரும் சுயமாக எழுத்துமூலம், வாக்குமூலம் அளித்துள்ளீர்கள். இதில் சிலருக்கு பரீட்சை பெறுபேறுகள் வரமாட்டாது” என்றும் கூறியிருக்கிறார்கள். இதனை குறித்த, மேலதிக பரீட்சை மண்டப அதிகாரியை பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சியாகவே நாம் கருதுகின்றோம்.

முதல் நாளில் 70 மாணவிகளுக்கும் பொறுப்பதிகாரி இருவரும் துப்பட்டாவினை விளக்கி அவர்களின் காதுகளை காட்டுமாறு கூறியபோது, மாணவிகள் அதனை செய்துவிட்டே பரீட்சை எழுதியிருக்கின்றார்கள். ஐந்து பாடங்களின் பரீட்சை முடியும் வரை, மூதூரை சேர்ந்த மேலதிக பொறுப்பதிகாரி ‘உங்கள் எவருக்கும் பரீட்சை பெறுபேறுகள் வரமாட்டாது’ என்பதனை முன்கூட்டியே கூறி வந்திருக்கின்றார்.

அவ்வாறே பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசரணையை ஒரு கண்துடைப்பாகவே கருதவேண்டி இருக்கிறது

ஏற்கனவே, திருகோணமலை மாவட்ட அபாயா, பர்தா பிரச்சினை நீதிமன்றத்தால் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும், தற்பொழுது மாணவிகளின் பெறுபேறுகள் தொடர்பில், பல்வேறு பெயர்களில் இனவாதத்தைகக்கும், தன்னை தமிழ் இனவாதி என்று பகிரங்கமாக கூறுகின்ற ஒருவர், ஊடகங்களையும் ஊடகவியளாலரையும் தூண்டுகின்ற விதத்தில், ஸாஹிரா கல்லூரி மீதும் மாணவிகளின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் மோசமாக செயற்பட்டு வருகின்றார்கள். அவ்வாறன செயற்பாடுகளை அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.

இதேவேளை, சாஹிரா கல்லுாரி மாணவிகளின் பெறுபேறுகளை வெளியிடாது, இடைநிறுத்தியுள்ளமையானது அனுமதிக்க முடியாத செயலென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, மேற்படி விடயத்தின் பாரதுாரமான பாதிப்பு தொடர்பில் எடுத்துரைத்துள்ளார். அத்துடன், பரீட்சை மீளாய்வுகளுக்காக எதிர்வரும் 05ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென அறிவித்தல் வெளியாகி உள்ளதால், அதற்கு முன்னர், உடனடியாக பெறுபேறுகளை வெளியிடுமாறும் அவர் ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்” எனவும் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

 


திட்டமிட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள திருமலை மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள்.அப்துல்லா மஹ்ரூப் குற்றச்சாட்டு. அண்மையில் க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியானபோதும் திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவர்களில் 70 மாணவிகளுக்கு பரீட்சை பெறுபேறு வெளியாகவில்லை இதை திட்டமிட்டு செய்துள்ளார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.கிண்ணியாவில் நேற்றையதினம்(03) இடம்பெற்ற  ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இவ் விடயம் தொடர்பில் சாஹிரா கல்லூரியின்  அதிபர் முகைஸ் அவர்களையும், ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்தி குழு உறுப்பினர்களையும் மாணவர்களின் பரீட்சை பெறு பெறுகள் தொடர்பாக கலந்துரையாடிய போது பரீட்சை மண்டபத்தில் இடம் பெற்ற பல நிகழ்வுகள்  சென்ஜோசப் பரீட்சை மண்டபத்தின் பொருப்பதிகாரி மீதும் ,மூதூரை சேர்ந்த மேலதிக உதவி அதிகாரியின் நடவடிக்கை தொடர்பாகவும் பாரிய ஒரு சந்தேகத்தை எமக்கு உருவாக்கி உள்ளனதிருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இன்று (03)  திருகோணமலை ஸாஹிரா கல்லூரி அதிபர் முகைஸ், ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்திக் குழு உறுப்பினர்களையும் சந்தித்து, மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக கலந்துரையாடியபோது, பரீட்சை மண்டபத்தில் இடம்பெற்ற பல நிகழ்வுகள், செஞ்ஜோசப் பரீட்சை மண்டபத்தின் பொறுப்பதிகாரி மீதும் மூதூரை சேர்ந்த மேலதிக உதவி அதிகாரியின் நடவடிக்கை குறித்தும் பாரிய சந்தேகத்தை எமக்கு தோற்றுவித்துள்ளது.திருகோணமலை நகரில் உள்ள பழைமை வாய்ந்த பாடசாலைகளை விட, குறிப்பாக ஸாஹிரா கல்லூரியின் பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில், கடந்த 10 வருட காலமாக குறைந்தபட்சம் 10க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவத்துறையிலும், பொறியியல் துறையிலும் தேர்வாகி வரும் நிலையில், இந்த செயல் கல்லூரி மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே நோக்கப்படுகின்றது.இம்முறை 04 மாணவிகள் பொறியியல் துறைக்கும், 09க்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவத் துறைக்கும் தெரிவுசெய்யப்படுவார்கள் என்று கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையிலேயே பெறுபேறுகள் வெளியாகாமல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.கல்வித் திணைக்களத்தினால், கல்லூரி அதிபருக்கும் 70 மாணவிகளுக்கும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டபோது, மேலதிக பரீட்சை பொறுப்பதிகாரி நடந்துகொண்ட விதம் தொடர்பாக, மாணவிகள் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை குழுவுக்கு முன்வைத்துள்ளனர்.பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பரீட்சார்த்திகளுக்கு சாப்பிடுவதற்கு கச்சான் வழங்கியதாகவும், பர்தாவும் துப்பட்டாவும் அணிந்திருந்த மாணவிகள் அனைவருக்கும் பரீட்சை பெறுபேறுகள் வெளிவரமாட்டாது என்பதனை, பல சந்தர்ப்பங்களில் பரீட்சை மேலதிக பொருப்பதிகாரி கூறி வந்தமையும், இதனால் பரீட்சையில் தோற்றிய மாணவிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும், கல்வித் திணைக்கள  சட்ட நடவடிக்கை குழு முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார்கள்.மேலும், கல்வித் திணைக்கள விசாரணை குழுவினர், ஒவ்வொரு மாணவியரும் அவர்களின் வாக்குமூலங்களை எழுதுவதற்கு முன்னர், திருமலை வலயக் கல்விப் பணிமனையைச் சேர்ந்த சிலர் அவர்கள் சொல்வதை முதலில் எழுதச் சொன்னார்கள். அதன் பின்னர், வாக்குமூலம் எழுத்துமூலம் கொடுக்கப்பட்ட நிலையில், வலயக் கல்விப் பணிமனையைச் சேர்ந்தவர்கள் அவர்கள் கூறுவதையே முடிவாக எழுதச்சொல்லி மாணவிகளை பணித்திருக்கிறார்கள். பின்னர், ‘ஒவ்வொருவரும் சுயமாக எழுத்துமூலம், வாக்குமூலம் அளித்துள்ளீர்கள். இதில் சிலருக்கு பரீட்சை பெறுபேறுகள் வரமாட்டாது” என்றும் கூறியிருக்கிறார்கள். இதனை குறித்த, மேலதிக பரீட்சை மண்டப அதிகாரியை பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சியாகவே நாம் கருதுகின்றோம்.முதல் நாளில் 70 மாணவிகளுக்கும் பொறுப்பதிகாரி இருவரும் துப்பட்டாவினை விளக்கி அவர்களின் காதுகளை காட்டுமாறு கூறியபோது, மாணவிகள் அதனை செய்துவிட்டே பரீட்சை எழுதியிருக்கின்றார்கள். ஐந்து பாடங்களின் பரீட்சை முடியும் வரை, மூதூரை சேர்ந்த மேலதிக பொறுப்பதிகாரி ‘உங்கள் எவருக்கும் பரீட்சை பெறுபேறுகள் வரமாட்டாது’ என்பதனை முன்கூட்டியே கூறி வந்திருக்கின்றார்.அவ்வாறே பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசரணையை ஒரு கண்துடைப்பாகவே கருதவேண்டி இருக்கிறதுஏற்கனவே, திருகோணமலை மாவட்ட அபாயா, பர்தா பிரச்சினை நீதிமன்றத்தால் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும், தற்பொழுது மாணவிகளின் பெறுபேறுகள் தொடர்பில், பல்வேறு பெயர்களில் இனவாதத்தைகக்கும், தன்னை தமிழ் இனவாதி என்று பகிரங்கமாக கூறுகின்ற ஒருவர், ஊடகங்களையும் ஊடகவியளாலரையும் தூண்டுகின்ற விதத்தில், ஸாஹிரா கல்லூரி மீதும் மாணவிகளின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் மோசமாக செயற்பட்டு வருகின்றார்கள். அவ்வாறன செயற்பாடுகளை அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.இதேவேளை, சாஹிரா கல்லுாரி மாணவிகளின் பெறுபேறுகளை வெளியிடாது, இடைநிறுத்தியுள்ளமையானது அனுமதிக்க முடியாத செயலென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, மேற்படி விடயத்தின் பாரதுாரமான பாதிப்பு தொடர்பில் எடுத்துரைத்துள்ளார். அத்துடன், பரீட்சை மீளாய்வுகளுக்காக எதிர்வரும் 05ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென அறிவித்தல் வெளியாகி உள்ளதால், அதற்கு முன்னர், உடனடியாக பெறுபேறுகளை வெளியிடுமாறும் அவர் ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்” எனவும் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement