2025ஆம் ஆண்டில் மதுவரி வருமானம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இந்த ஆண்டில் கடந்த மார்ச் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 61.3 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது கடந்த 2023ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 117 வீத வளர்ச்சியாகும் என மதுவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், 2025ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 48 பில்லியன் ரூபாய் வருமானம் எதிர்பார்க்கப்பட்டதாகவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் மதுவரி வருமானம் அதிகரிப்பு 2025ஆம் ஆண்டில் மதுவரி வருமானம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இந்த ஆண்டில் கடந்த மார்ச் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 61.3 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது கடந்த 2023ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 117 வீத வளர்ச்சியாகும் என மதுவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், 2025ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 48 பில்லியன் ரூபாய் வருமானம் எதிர்பார்க்கப்பட்டதாகவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.