கட்சியின் மீது காழ்புணர்ச்சி கொண்ட அல்லது அரசியல் ரீதியாக சேறு பூச வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பொய்பிரச்சாரங்கள் பரப்பப்படுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு கூட்டம் வவுனியாவில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது தலைமைகுழு கூட்டம் இன்று இடம்பெற்றது. இதில் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள், 2026 பேராளர் மாநாடு, மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.
கடந்த சில வாரங்களாக திட்டமிட்ட வகையிலே சில முகநூல்களிலும் இணையத்தளங்களிலும் நமது கட்சிக்கு எதிரான அல்லது கட்சியை களங்கப்படுத்தும் வகையில் சில ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விமர்சனங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அது சம்பந்தமாக இன்று ஆராய்ந்திருந்தோம்.
எங்கள் கட்சியின் மீது காழ்புணர்ச்சி கொண்ட அல்லது அரசியல் ரீதியாக திட்டமிட்டு எங்கள் கட்சியின் மீது சேறு பூச வேண்டும் என்று அல்லது அரசியல் ரீதியாக எங்களை தாக்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் ஊடாகத்தான் இந்த விடயம் பிழையான ஒரு பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது
இது உண்மை இல்லையா என்பதை ஆராய்வதற்காக தலைமைக்குழுவிலே ஒரு முக்கியமான குழு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த விடயங்களை ஆராய்ந்து பேராளர் மாநாட்டிலே இது சம்பந்தமான வெளிப்படுத்தலை செய்வார்கள்.
பொதுவாக கடந்த கால தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பின்னராக பல தடவைகள் எங்களுடைய கட்சி கூடி ஆராய்ந்துள்ளது. எங்களுடைய மாவட்ட ரீதியான, தொகுதி ரீதியான, வட்டார ரீதியான கட்சி கட்டமைப்பையும் அதேபோன்று தலைமைக்குழுவில் இளைஞர்களுக்காக இடைவெளியை அதிகரித்து புதியவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் நாங்கள் எடுத்திருக்கிறோம். அது சம்பந்தமாகவும் தலைமைக்குழுவில் தீர்மானிக்க முடியாது.
ஆகவே அதை நாங்கள் பேராளர் மாநாட்டிலே தான் அப்படியான மாற்றங்களையும் கொண்டுவர வேண்டும் என்ற தீர்மானத்தையும் எடுத்திருக்கிறோம்.
பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கின்ற கட்சியின் உறுப்பினர்களின் கைகளிலே தான் அந்த விடயங்களை கையளிப்போம். பேராளர் மாநாட்டை ஜனவரி 2026க்குள் அனைத்து மாவட்டத்தின் உறுப்பினர்களையும் ஒருங்கமைத்து இது சம்பந்தமான முடிவுகளை எட்டி எங்களுடைய கட்சியை மேலும் பலப்படுத்திக்கொண்டு பயணிப்பதற்கான தீர்மானத்தை எடுத்திருக்கிறோம்.
அத்துடன் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் சம்பந்தமான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை தான் அந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதனால் அதைப்பற்றி சரியாக படித்து சரியான விடயங்களை ஆராய்வதற்கான கால அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது. ஆகவே மீண்டும் எங்களுடைய தலைமைக்குழு இணைய வழியின் ஊடாக கூடி அந்த பட்ஜெட் சம்பந்தமான தீர்மானங்களை எடுக்கும்.
எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு நாங்கள் பங்கேற்பது தொடர்பாக கலந்துரையாடல் எதனையும் மேற்கொள்ளவில்லை. எங்களுக்கு அதற்கான அழைப்பு வரவும் இல்லை. அதில் நாங்கள் கலந்து கொள்வதும் சாத்தியமில்லை
அத்துடன் இணைந்து செயற்படுவது தொர்பாக தமிழரசுகட்சி ஒரு அழைப்பினை விடுத்திருந்தது. அதைப்பற்றி நாங்கள் பேசியிருந்தோம். நாங்கள் அந்த முடிவை அறிவிப்பதற்கு முன்னதாக அவர்களுடைய நிபந்தனை என்ன என்பதை அறிய வேண்டும். நாங்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக இன்று பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதேபோன்று தமிழ் தேசிய பேரவையுடன் நாங்கள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பதால் அவர்களோடும் கலந்து ஆலோசிக்கவேண்டும்
இந்த ஒற்றுமையை நாங்கள் நேசிக்கிறோம். இந்த அரவணைப்பை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரம் இதை எப்படி செயல்படுத்துவது என்பது எங்களுடைய அங்கத்துவ கட்சிகளோடு கலந்து ஆலோசித்துத்தான் அந்த முடிவை அறிவிப்பதாக இருக்கிறோம். என்றார்.
கட்சியை களங்கப்படுத்தவே பொய்ப்பிரச்சாரங்கள் - ரெலோ பேச்சாளர் சுரேன் குருசாமி கட்சியின் மீது காழ்புணர்ச்சி கொண்ட அல்லது அரசியல் ரீதியாக சேறு பூச வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பொய்பிரச்சாரங்கள் பரப்பப்படுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்தார்.தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு கூட்டம் வவுனியாவில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது தலைமைகுழு கூட்டம் இன்று இடம்பெற்றது. இதில் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள், 2026 பேராளர் மாநாடு, மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.கடந்த சில வாரங்களாக திட்டமிட்ட வகையிலே சில முகநூல்களிலும் இணையத்தளங்களிலும் நமது கட்சிக்கு எதிரான அல்லது கட்சியை களங்கப்படுத்தும் வகையில் சில ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விமர்சனங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அது சம்பந்தமாக இன்று ஆராய்ந்திருந்தோம். எங்கள் கட்சியின் மீது காழ்புணர்ச்சி கொண்ட அல்லது அரசியல் ரீதியாக திட்டமிட்டு எங்கள் கட்சியின் மீது சேறு பூச வேண்டும் என்று அல்லது அரசியல் ரீதியாக எங்களை தாக்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் ஊடாகத்தான் இந்த விடயம் பிழையான ஒரு பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறதுஇது உண்மை இல்லையா என்பதை ஆராய்வதற்காக தலைமைக்குழுவிலே ஒரு முக்கியமான குழு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த விடயங்களை ஆராய்ந்து பேராளர் மாநாட்டிலே இது சம்பந்தமான வெளிப்படுத்தலை செய்வார்கள்.பொதுவாக கடந்த கால தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பின்னராக பல தடவைகள் எங்களுடைய கட்சி கூடி ஆராய்ந்துள்ளது. எங்களுடைய மாவட்ட ரீதியான, தொகுதி ரீதியான, வட்டார ரீதியான கட்சி கட்டமைப்பையும் அதேபோன்று தலைமைக்குழுவில் இளைஞர்களுக்காக இடைவெளியை அதிகரித்து புதியவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் நாங்கள் எடுத்திருக்கிறோம். அது சம்பந்தமாகவும் தலைமைக்குழுவில் தீர்மானிக்க முடியாது. ஆகவே அதை நாங்கள் பேராளர் மாநாட்டிலே தான் அப்படியான மாற்றங்களையும் கொண்டுவர வேண்டும் என்ற தீர்மானத்தையும் எடுத்திருக்கிறோம். பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கின்ற கட்சியின் உறுப்பினர்களின் கைகளிலே தான் அந்த விடயங்களை கையளிப்போம். பேராளர் மாநாட்டை ஜனவரி 2026க்குள் அனைத்து மாவட்டத்தின் உறுப்பினர்களையும் ஒருங்கமைத்து இது சம்பந்தமான முடிவுகளை எட்டி எங்களுடைய கட்சியை மேலும் பலப்படுத்திக்கொண்டு பயணிப்பதற்கான தீர்மானத்தை எடுத்திருக்கிறோம். அத்துடன் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் சம்பந்தமான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை தான் அந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதனால் அதைப்பற்றி சரியாக படித்து சரியான விடயங்களை ஆராய்வதற்கான கால அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது. ஆகவே மீண்டும் எங்களுடைய தலைமைக்குழு இணைய வழியின் ஊடாக கூடி அந்த பட்ஜெட் சம்பந்தமான தீர்மானங்களை எடுக்கும்.எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு நாங்கள் பங்கேற்பது தொடர்பாக கலந்துரையாடல் எதனையும் மேற்கொள்ளவில்லை. எங்களுக்கு அதற்கான அழைப்பு வரவும் இல்லை. அதில் நாங்கள் கலந்து கொள்வதும் சாத்தியமில்லை அத்துடன் இணைந்து செயற்படுவது தொர்பாக தமிழரசுகட்சி ஒரு அழைப்பினை விடுத்திருந்தது. அதைப்பற்றி நாங்கள் பேசியிருந்தோம். நாங்கள் அந்த முடிவை அறிவிப்பதற்கு முன்னதாக அவர்களுடைய நிபந்தனை என்ன என்பதை அறிய வேண்டும். நாங்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக இன்று பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதேபோன்று தமிழ் தேசிய பேரவையுடன் நாங்கள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பதால் அவர்களோடும் கலந்து ஆலோசிக்கவேண்டும் இந்த ஒற்றுமையை நாங்கள் நேசிக்கிறோம். இந்த அரவணைப்பை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரம் இதை எப்படி செயல்படுத்துவது என்பது எங்களுடைய அங்கத்துவ கட்சிகளோடு கலந்து ஆலோசித்துத்தான் அந்த முடிவை அறிவிப்பதாக இருக்கிறோம். என்றார்.