• Sep 29 2024

கொழும்பில் கோர விபத்து! - ஓட்டோ சாரதி பலி; இரு பெண்கள் படுகாயம்

Chithra / Dec 11th 2022, 7:57 am
image

Advertisement

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓட்டோ சாரதி உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பு - கொள்ளுப்பிட்டி கார்கில்ஸ் வங்கிக்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த வீதியில் பயணித்த கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்பாகச் சென்ற ஓட்டோவுடன் மோதுண்டது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஓட்டோ சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பெண்கள் சிகிச்சைகளுக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பில் கோர விபத்து - ஓட்டோ சாரதி பலி; இரு பெண்கள் படுகாயம் கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓட்டோ சாரதி உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.கொழும்பு - கொள்ளுப்பிட்டி கார்கில்ஸ் வங்கிக்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.குறித்த வீதியில் பயணித்த கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்பாகச் சென்ற ஓட்டோவுடன் மோதுண்டது.சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஓட்டோ சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பெண்கள் சிகிச்சைகளுக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement