ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதி லபுகம பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளர்.
இந்த விபத்தில் காயமடைந்த தாய் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தந்தை, மகன் மற்றும் தாயார் ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.