இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
அதற்கமைய, தேசிய சுதந்திர முன்னணியை சேர்ந்த ஜகத் பிரியங்கர அந்த பதவியில் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியங்கர, விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் மாவட்டத் தலைவராக செயற்படுகின்றார்.
அவர் தனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பதால், அரசாங்கம் ஒரு ஆசனத்தை இழக்க நேரிடும் என அரசியல் ஆய்வளர்கள் குறிப்பிடுகின்றனர்.