• May 02 2024

மட்டக்களப்பில் சக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகள் மீட்பு..!

Chithra / Jan 25th 2024, 10:30 am
image

Advertisement

 

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து இரண்டு சக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வாவியின் பட்டிருப்பு பகுதியில் கடற்றொழிலில்  ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர் ஒருவரின் வலையில் இந்த இரு குண்டுகளும் ஆற்றிலிருந்து அகப்பட்டுள்ளன.

அதனை அவதானித்த குறித்த கடற்றொழிலாளர் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் அவ்விடத்திற்கு  விரைந்த பொலிஸார் இரண்டு குண்டுகளையும் மீட்டுள்ளனர்.

இவ்விரு குண்டுகளும், 9 இஞ்சி அளவைக் கொண்ட மோட்டார் குண்டுகள் என தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்ற உத்தரவைப் பெற்று குண்டு செயலிழக்கும் பிரிவினரைக் கொண்டு இக்குண்டுகள் செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த யுத்த காலத்தில் பட்டிருப்பு பாலத்தில் இருமருங்கிலும் இராணுவத்தினரின் பாதுகாப்பு காவலரண்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் சக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகள் மீட்பு.  மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து இரண்டு சக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.மட்டக்களப்பு வாவியின் பட்டிருப்பு பகுதியில் கடற்றொழிலில்  ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர் ஒருவரின் வலையில் இந்த இரு குண்டுகளும் ஆற்றிலிருந்து அகப்பட்டுள்ளன.அதனை அவதானித்த குறித்த கடற்றொழிலாளர் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் அவ்விடத்திற்கு  விரைந்த பொலிஸார் இரண்டு குண்டுகளையும் மீட்டுள்ளனர்.இவ்விரு குண்டுகளும், 9 இஞ்சி அளவைக் கொண்ட மோட்டார் குண்டுகள் என தெரிவிக்கப்படுகின்றது.நீதிமன்ற உத்தரவைப் பெற்று குண்டு செயலிழக்கும் பிரிவினரைக் கொண்டு இக்குண்டுகள் செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த யுத்த காலத்தில் பட்டிருப்பு பாலத்தில் இருமருங்கிலும் இராணுவத்தினரின் பாதுகாப்பு காவலரண்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement