• Oct 18 2024

மாணவர்களுக்கு இடையில் வெடித்த மோதல் - கட்டரால் கையை அறுத்த சக மாணவன்

Chithra / Jun 4th 2024, 8:26 am
image

Advertisement


பாடசாலை ஒன்றின் தரம் 12 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை முடிந்து வீடு திரும்பிய போது வழியில் இந்த தகராறு இடம்பெற்றுள்ளது.

இந்த தோதலில் மாணவர் ஒருவர் தன்னிடமிருந்த காகிதம் வெட்டும் கட்டர் மூலம் மற்றுமொரு மாணவனின் கையை அறுத்த நிலையில், அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று 7 தையல் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஹிக்கடுவ பொலிஸ் எல்லைக்குட்பட்ட வேவல கொலனியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காகிதம் வெட்டும் கட்டரை பயன்படுத்தி வெட்டியதாகக் கூறப்படும் மாணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாணவர்களுக்கு இடையில் வெடித்த மோதல் - கட்டரால் கையை அறுத்த சக மாணவன் பாடசாலை ஒன்றின் தரம் 12 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை முடிந்து வீடு திரும்பிய போது வழியில் இந்த தகராறு இடம்பெற்றுள்ளது.இந்த தோதலில் மாணவர் ஒருவர் தன்னிடமிருந்த காகிதம் வெட்டும் கட்டர் மூலம் மற்றுமொரு மாணவனின் கையை அறுத்த நிலையில், அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று 7 தையல் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.ஹிக்கடுவ பொலிஸ் எல்லைக்குட்பட்ட வேவல கொலனியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.காகிதம் வெட்டும் கட்டரை பயன்படுத்தி வெட்டியதாகக் கூறப்படும் மாணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement