• Jun 24 2025

12 நாட்கள் உயிருக்கு போராட்டம்! மகனின் சடலத்துடன் மோட்டார் சைக்கிளையும் புதைத்த பெற்றோர்!

Chithra / Jun 24th 2025, 4:20 pm
image


மகனின் சடலத்துடன் பைக்கையும் சேர்த்து புதைத்த பெற்றோர்! மனதை கலங்க வைக்கும் சம்பவம்!

குஜராத் மாநிலம் நாடியாத் அருகேயுள்ள உத்தரசந்தா கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

18 வயதுடைய கிரிஷ் பர்மர்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

கிரிஷ் சென்ற மோட்டார் சைக்கிள்  லொறியில் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

கடந்த மே 26 ஆம் திகதி கிரிஷ், ஆனந்த் நகரத்திற்கு கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பும் வழியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் தலை மற்றும் உடலில் ஏற்பட்ட காயங்களால், 12 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சமீபத்தில் 12ஆம் வகுப்பு தேர்வை முடித்த கிரிஷ், BCA படிக்கத் திட்டமிட்டிருந்தார். 

மோட்டார் சைக்கிளை மிகவும்  நேசித்த அவர், கார் இருந்தும் எப்போதும் மோட்டார் சைக்கிளில் தான் பயணம் செய்வார் என அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.

கிரிஷின் விருப்பத்தை மரணத்திலும் மதிக்க வேண்டுமென எண்ணிய குடும்பத்தினர், அவரது இஷ்டமான மோட்டார் சைக்கிளை இறுதிச்சடங்கில் அவரோடு சேர்த்து புதைத்தனர். 

அவரது உடையுடன் கண்ணாடி, காலணி, ஆடைகள் மற்றும் மோட்டார் சைக்கிளையும்  கல்லறையில் வைக்கப்பட்ட சம்பவம்  அனைவரையும் நெகிழ வைத்தது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


12 நாட்கள் உயிருக்கு போராட்டம் மகனின் சடலத்துடன் மோட்டார் சைக்கிளையும் புதைத்த பெற்றோர் மகனின் சடலத்துடன் பைக்கையும் சேர்த்து புதைத்த பெற்றோர் மனதை கலங்க வைக்கும் சம்பவம்குஜராத் மாநிலம் நாடியாத் அருகேயுள்ள உத்தரசந்தா கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 18 வயதுடைய கிரிஷ் பர்மர்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கிரிஷ் சென்ற மோட்டார் சைக்கிள்  லொறியில் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.கடந்த மே 26 ஆம் திகதி கிரிஷ், ஆனந்த் நகரத்திற்கு கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பும் வழியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் தலை மற்றும் உடலில் ஏற்பட்ட காயங்களால், 12 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.சமீபத்தில் 12ஆம் வகுப்பு தேர்வை முடித்த கிரிஷ், BCA படிக்கத் திட்டமிட்டிருந்தார். மோட்டார் சைக்கிளை மிகவும்  நேசித்த அவர், கார் இருந்தும் எப்போதும் மோட்டார் சைக்கிளில் தான் பயணம் செய்வார் என அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.கிரிஷின் விருப்பத்தை மரணத்திலும் மதிக்க வேண்டுமென எண்ணிய குடும்பத்தினர், அவரது இஷ்டமான மோட்டார் சைக்கிளை இறுதிச்சடங்கில் அவரோடு சேர்த்து புதைத்தனர். அவரது உடையுடன் கண்ணாடி, காலணி, ஆடைகள் மற்றும் மோட்டார் சைக்கிளையும்  கல்லறையில் வைக்கப்பட்ட சம்பவம்  அனைவரையும் நெகிழ வைத்தது.இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement