ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்ப கோரியும், ஆசிரியர் இடமாற்றங்களை நிறுத்தகோரியும் எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம்காலை திம்பிலி ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றிருந்தது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திம்பிலி கிராமத்தில் அமைந்துள்ள திம்பிலி ஆரம்ப பாடசாலையில் இருக்கும் ஆசிரிய பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யுமாறும்,
ஏற்கனவே குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆங்கில பாட ஆசிரியரின் இடமாற்றத்தினை நிறுத்த கோரியும் அப்பிரதேச மக்கள், கிராம மட்ட அமைப்பினர் இணைந்து பாடசாலைக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததனர்.
கடந்த வருடம் மே மாதம் ஆங்கில ஆசிரியர் ஒருவர் இப்பாடசாலைக்கு நியமிக்கப்பட்டு திடீரென அவ் ஆசிரியருக்கு இம்மாதம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ் ஆசிரியரின் இடமாற்றம் குறித்து கோட்டக்கல்வி பணிமனையிடம் கதைத்தபோது, இதற்குரிய தீர்வினை ஒரு மாதகாலத்திற்குள் வழங்குவதாக உரிய அதிகாரிகள் கூறியுள்ளதாக பெற்றோர்கள் கூறியிருந்தனர்.
இருப்பினும் ஒரு மாத காலத்திற்குள் ஆசிரியர் இடமாற்றம் நிவர்த்தி செய்யப்படாதுவிடின் மீண்டும் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
குறித்த போராட்டத்தில் குறித்த கிராம மக்கள், கிராம மட்ட அமைப்பினர், நலன்விரும்பிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்பவும், ஆசிரியர் இடமாற்றத்தை நிறுத்தவும் திம்பிலி ஆரம்ப பாடசாலைக்குமுன் போராட்டம் ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்ப கோரியும், ஆசிரியர் இடமாற்றங்களை நிறுத்தகோரியும் எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம்காலை திம்பிலி ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றிருந்தது.புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திம்பிலி கிராமத்தில் அமைந்துள்ள திம்பிலி ஆரம்ப பாடசாலையில் இருக்கும் ஆசிரிய பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யுமாறும், ஏற்கனவே குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆங்கில பாட ஆசிரியரின் இடமாற்றத்தினை நிறுத்த கோரியும் அப்பிரதேச மக்கள், கிராம மட்ட அமைப்பினர் இணைந்து பாடசாலைக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததனர்.கடந்த வருடம் மே மாதம் ஆங்கில ஆசிரியர் ஒருவர் இப்பாடசாலைக்கு நியமிக்கப்பட்டு திடீரென அவ் ஆசிரியருக்கு இம்மாதம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ் ஆசிரியரின் இடமாற்றம் குறித்து கோட்டக்கல்வி பணிமனையிடம் கதைத்தபோது, இதற்குரிய தீர்வினை ஒரு மாதகாலத்திற்குள் வழங்குவதாக உரிய அதிகாரிகள் கூறியுள்ளதாக பெற்றோர்கள் கூறியிருந்தனர். இருப்பினும் ஒரு மாத காலத்திற்குள் ஆசிரியர் இடமாற்றம் நிவர்த்தி செய்யப்படாதுவிடின் மீண்டும் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.குறித்த போராட்டத்தில் குறித்த கிராம மக்கள், கிராம மட்ட அமைப்பினர், நலன்விரும்பிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.