முல்லைத்தீவு மாஞ்சோலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீப் பரவல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் நேரில் சென்று ஆராய்ந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக ஏற்பட்ட தீயில் இருகடைகள் முற்றாக எரிந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு கிச்சிராபுரம் கிராம சேவையாளர் பிரிவில் மாஞ்சோலை வைத்தியாசாலை முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட தீயில் உணவகம் மற்றும் அருகில் உள்ள பாட்டா கடை முற்றாக எரிந்துள்ளது.
அதனையடுத்து அருகே இருந்த கடைகளிலுள்ள பொருட்கள் துரித கதியில் அகற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு இராணுவம் , பொலிஸார், அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்கள் இணைந்து தீயினை கடும் பிரயத்தனத்தின் மத்தியில் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதேவேளை சம்பவ இடத்தினை பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பார்வையிட்டிருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு வசதி இதுவரை ஏற்படுத்தப்படவில்லை எனவும் தீ பரவும் சந்தர்ப்பத்தில் தீயணைப்பு கருவி இல்லாத காரணத்தினலே பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.
முல்லை கடைத்தொகுதியில் தீ பரவல் சம்பவம்: ரவிகரன் எம்.பி ஆராய்வு. முல்லைத்தீவு மாஞ்சோலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீப் பரவல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் நேரில் சென்று ஆராய்ந்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக ஏற்பட்ட தீயில் இருகடைகள் முற்றாக எரிந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு கிச்சிராபுரம் கிராம சேவையாளர் பிரிவில் மாஞ்சோலை வைத்தியாசாலை முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட தீயில் உணவகம் மற்றும் அருகில் உள்ள பாட்டா கடை முற்றாக எரிந்துள்ளது. அதனையடுத்து அருகே இருந்த கடைகளிலுள்ள பொருட்கள் துரித கதியில் அகற்றப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு இராணுவம் , பொலிஸார், அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்கள் இணைந்து தீயினை கடும் பிரயத்தனத்தின் மத்தியில் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இதேவேளை சம்பவ இடத்தினை பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பார்வையிட்டிருந்தனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு வசதி இதுவரை ஏற்படுத்தப்படவில்லை எனவும் தீ பரவும் சந்தர்ப்பத்தில் தீயணைப்பு கருவி இல்லாத காரணத்தினலே பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.