தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தோட்ட புதிய வீடமைப்பு திட்டத்தின் அருகில் காணப்படும் காட்டில் ஏற்பட்ட தீ கடந்த ஒரு மணித்தியாலமாக கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தீ பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிரதேசம் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் அருகில் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தீ பரவலால் சுமார் 5 ஏக்கர் வரையான காடு தீக்கிரையாகி இருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தீ பரவலுக்குரிய காரணம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.