தப்போவ சரணாலயம் 10ம் கட்டைப் பகுதியில் நேற்று மாலை பரவிய தீயினால் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்தப் பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணக்கள அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவலை வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் புத்தளம் மாவட்ட அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் இனைந்து பாரிய சிரமத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த தீப்பரவியமைக்கான காரணம் இதுவரைக் கண்டரியப்படவில்லை.
குறித்த சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
தப்போவ சரணாலயத்தில் பரவிய தீ - 40 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரை தப்போவ சரணாலயம் 10ம் கட்டைப் பகுதியில் நேற்று மாலை பரவிய தீயினால் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்தப் பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணக்கள அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவலை வழங்கியுள்ளனர்.இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் புத்தளம் மாவட்ட அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் இனைந்து பாரிய சிரமத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த தீப்பரவியமைக்கான காரணம் இதுவரைக் கண்டரியப்படவில்லை.குறித்த சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.