• Sep 21 2024

முதலாவது தேர்தல் முடிவு இன்று இரவு 11 மணிக்குள் வெளியாகும் - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Tamil nila / Sep 21st 2024, 1:30 pm
image

Advertisement

ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலினது வாக்களிப்பின் முதலாவது முடிவை இன்று (21) இரவு 11.00 மணிக்குள் வெளியிடக்கூடியதாக இருக்குமென, தேர்தல்கள் ஆணைக்குழு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பின்

முடிவுகள் பெரும்பாலும் முதலில் வெளியாகுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் முடிவுகளை விரைவாக வெளியிடுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. தபால் வாக்குகள் எண்ணும் பணி இன்று மாலை 4.15 மணிக்கு ஆரம்பமாகிறது. இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் சுமார் ஏழு இலட்சம் அரசாங்க ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்பில் ஈடுபட்டனர்.


முதலாவது தேர்தல் முடிவு இன்று இரவு 11 மணிக்குள் வெளியாகும் - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலினது வாக்களிப்பின் முதலாவது முடிவை இன்று (21) இரவு 11.00 மணிக்குள் வெளியிடக்கூடியதாக இருக்குமென, தேர்தல்கள் ஆணைக்குழு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பின்முடிவுகள் பெரும்பாலும் முதலில் வெளியாகுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தல் முடிவுகளை விரைவாக வெளியிடுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. தபால் வாக்குகள் எண்ணும் பணி இன்று மாலை 4.15 மணிக்கு ஆரம்பமாகிறது. இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் சுமார் ஏழு இலட்சம் அரசாங்க ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement