• May 20 2024

வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள்...! தம்பலகாமத்தில் மக்கள் அவதி...!samugammedia

Sharmi / Jan 10th 2024, 10:09 am
image

Advertisement

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது.

குறிப்பாக திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

தொடர்ச்சியான அடை மழை காரணமாக பாலம்போட்டாறு ,பத்தினிபுரம்,இக்பால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அன்றாட இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். 

நீர் அதிகமாக வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் நீர் அதிகமாக வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை உரிய அதிகாரிகள் பெற்றுத்தருவதற்கு முயற்சிக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.


வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள். தம்பலகாமத்தில் மக்கள் அவதி.samugammedia நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது.குறிப்பாக திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ச்சியான அடை மழை காரணமாக பாலம்போட்டாறு ,பத்தினிபுரம்,இக்பால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அன்றாட இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.  நீர் அதிகமாக வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.கந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் நீர் அதிகமாக வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை உரிய அதிகாரிகள் பெற்றுத்தருவதற்கு முயற்சிக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement