அம்பாறை - தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலஸ்கல வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் தெஹியத்தகண்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலன்னறுவை அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார்.
இவர் கடமைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் தெஹியத்தகண்டிய பொலிஸ் நிலையத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது காட்டு யானை தாக்கி படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்தவர் பிரதேசவாசிகளின் உதவியுடன் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காட்டு யானை தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் பலி அம்பாறை - தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலஸ்கல வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தெஹியத்தகண்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலன்னறுவை அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார். இவர் கடமைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் தெஹியத்தகண்டிய பொலிஸ் நிலையத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது காட்டு யானை தாக்கி படுகாயமடைந்துள்ளார்.படுகாயமடைந்தவர் பிரதேசவாசிகளின் உதவியுடன் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.