• Jun 17 2025

ஜி -7 தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஒருங்கிணைந்த ஆதரவு..!

shanuja / Jun 17th 2025, 1:00 pm
image


இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் இஸ்ரேலுக்கு தமது ஒருங்கிணைந்த ஆதரவை  வழங்குவோம் என்று ஜி -7 தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.


 ஜி -7 தலைவர்கள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு இஸ்ரேலுக்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 


இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு எங்கள் ஆதரவை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். 


பிராந்திய உறுதியற்ற தன்மை மற்றும் பயங்கரவாதத்தின் முக்கிய ஆதாரமாக" ஈரானை அந்தக் குழு கண்டித்தது, ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என்ற நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.


உலகின் மிகப்பெரிய முன்னேறிய பொருளாதாரங்களின் தலைவர்களுக்கு "ஈரானிய நெருக்கடிக்கு" தீர்வு காணவும், "காசாவில் போர் நிறுத்தம் உட்பட மத்திய கிழக்கில் விரோதப் போக்கை பரந்த அளவில் குறைக்கவும்" அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


G7 பொருளாதாரங்களில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகியவை அடங்கும். மேலும் இந்த ஆண்டு உச்சிமாநாடுகள் ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, பிரேசில், மெக்சிகோ, உக்ரைன் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். 



இதற்கிடையே நடைபெறவுள்ள உச்சிமாநாடுகளின் இரண்டாவது மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனார்ட் ட்ரம்ப் கலந்து கொள்ள மாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜி -7 தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஒருங்கிணைந்த ஆதரவு. இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் இஸ்ரேலுக்கு தமது ஒருங்கிணைந்த ஆதரவை  வழங்குவோம் என்று ஜி -7 தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். ஜி -7 தலைவர்கள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு இஸ்ரேலுக்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு எங்கள் ஆதரவை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். பிராந்திய உறுதியற்ற தன்மை மற்றும் பயங்கரவாதத்தின் முக்கிய ஆதாரமாக" ஈரானை அந்தக் குழு கண்டித்தது, ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என்ற நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.உலகின் மிகப்பெரிய முன்னேறிய பொருளாதாரங்களின் தலைவர்களுக்கு "ஈரானிய நெருக்கடிக்கு" தீர்வு காணவும், "காசாவில் போர் நிறுத்தம் உட்பட மத்திய கிழக்கில் விரோதப் போக்கை பரந்த அளவில் குறைக்கவும்" அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.G7 பொருளாதாரங்களில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகியவை அடங்கும். மேலும் இந்த ஆண்டு உச்சிமாநாடுகள் ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, பிரேசில், மெக்சிகோ, உக்ரைன் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே நடைபெறவுள்ள உச்சிமாநாடுகளின் இரண்டாவது மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனார்ட் ட்ரம்ப் கலந்து கொள்ள மாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement