• Mar 10 2025

புதையலில் கிடைத்த தங்க நாணயங்கள்; ஏமாற்றி விற்க முயன்ற இருவருக்கு நேர்ந்த கதி

Chithra / Mar 9th 2025, 3:38 pm
image

 

புதையல் மூலம் எடுக்கப்பட்ட தங்க நாணயங்கள் என கூறி தங்க மூலாம் பூசப்பட்ட போலி நாணயங்களை விற்பனை செய்வதற்கு முயன்ற சந்தேக நபர்கள் இருவரை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த போலி நாணயங்களை  ஏழு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகைக்கு விற்பனை செய்ய குறித்த இருவரும் முயன்றுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய , அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் நுவரவெவ பகுதியில் நேற்று நடத்திய சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதுடன் போலியான தங்கமூலாம் பூசப்பட்ட நாணயங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் 37,42 வயதுடைய அநுராதபுரம் கல்கடவள பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன்,

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதையலில் கிடைத்த தங்க நாணயங்கள்; ஏமாற்றி விற்க முயன்ற இருவருக்கு நேர்ந்த கதி  புதையல் மூலம் எடுக்கப்பட்ட தங்க நாணயங்கள் என கூறி தங்க மூலாம் பூசப்பட்ட போலி நாணயங்களை விற்பனை செய்வதற்கு முயன்ற சந்தேக நபர்கள் இருவரை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த போலி நாணயங்களை  ஏழு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகைக்கு விற்பனை செய்ய குறித்த இருவரும் முயன்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய , அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் நுவரவெவ பகுதியில் நேற்று நடத்திய சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதுடன் போலியான தங்கமூலாம் பூசப்பட்ட நாணயங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 37,42 வயதுடைய அநுராதபுரம் கல்கடவள பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement