• May 30 2025

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்; துமிந்தவின் விளக்கமறியல் நீடிப்பு..!

Sharmi / May 29th 2025, 4:07 pm
image

ஹெவ்லொக் சிட்டி வீடமைப்பு தொகுதியில் மீட்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட ரி 56 ரக துப்பாக்கி தொடர்பிலான வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவின் விளக்கமறியல், ஜூன் 5 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கல்கிசை நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

ஹெவ்லொக் சிட்டி வீடமைப்பு தொகுதியில் கடந்த 20 ஆம் திகதி மீட்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட ரி 56 ரக துப்பாக்கி தொடர்பில் பெண்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்தரமுல்லையை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும்  வெள்ளவத்தையை சேர்ந்த 68 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தங்கமுலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்கவை, மே.29 வரையிலும் விளக்கமறியில் வைக்குமாறு கல்கிசை பதில் நீதவான்  சாந்த குமார உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அத்துடன், கொழும்பு நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் பரிந்துரைத்த பின்னர், பொலிஸ் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பெற்ற மருத்துவ அறிக்கைகளின்படி, சந்தேக நபரான   துமிந்த திசாநாயக்கவின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், அவரை சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்புமாறு பதில் நீதவான் மேலும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், துமிந்த திசாநாயக்கவின் வீட்டில் சமையல்காரராகப் பணியாற்றிய ஒருவரே இரண்டு பெண்களுக்கும் துப்பாக்கியைக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் வெள்ளவத்தை பொலிஸாரால் ருவன்வெல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அந்த மூவரிடமும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்; துமிந்தவின் விளக்கமறியல் நீடிப்பு. ஹெவ்லொக் சிட்டி வீடமைப்பு தொகுதியில் மீட்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட ரி 56 ரக துப்பாக்கி தொடர்பிலான வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவின் விளக்கமறியல், ஜூன் 5 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.கல்கிசை நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தின் பின்னணிஹெவ்லொக் சிட்டி வீடமைப்பு தொகுதியில் கடந்த 20 ஆம் திகதி மீட்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட ரி 56 ரக துப்பாக்கி தொடர்பில் பெண்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.பத்தரமுல்லையை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும்  வெள்ளவத்தையை சேர்ந்த 68 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இதேவேளை, தங்கமுலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்கவை, மே.29 வரையிலும் விளக்கமறியில் வைக்குமாறு கல்கிசை பதில் நீதவான்  சாந்த குமார உத்தரவு பிறப்பித்திருந்தார்.அத்துடன், கொழும்பு நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் பரிந்துரைத்த பின்னர், பொலிஸ் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பெற்ற மருத்துவ அறிக்கைகளின்படி, சந்தேக நபரான   துமிந்த திசாநாயக்கவின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், அவரை சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்புமாறு பதில் நீதவான் மேலும் உத்தரவிட்டார்.இந்நிலையில், துமிந்த திசாநாயக்கவின் வீட்டில் சமையல்காரராகப் பணியாற்றிய ஒருவரே இரண்டு பெண்களுக்கும் துப்பாக்கியைக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் வெள்ளவத்தை பொலிஸாரால் ருவன்வெல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.அந்த மூவரிடமும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement