போக்குவரத்து குறைபாடுகளை கொண்ட அரச பேருந்தின் சாரதியின் அனுமதிப்பத்திரம் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சீரமைக்காவிடில் பேருந்துக்கு நிரந்தர தடை உத்தரவு வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்றயதினம் யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலைக்கு சொந்தமான பேருந்தின் சாரதிக்கே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுப்போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டுவரும் அரச தனியார் பேருந்துகள் நேற்றயதினம் வவுனியா மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது பேருந்துகளில் பல்வேறு குறைபாடுகள் உள்ளமை அவதானிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த பேருந்தின் சாரதிகளுக்கு பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் வவுனியாசாலைக்கு சொந்தமான அரச பேருந்து ஒன்றில் பல்வேறு குறைபாடுகள் அவதானிக்கப்பட்ட நிலையில் அந்த சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் போக்குவரத்து பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் தற்காலிகபத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பேருந்தில் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள் எதிர்வரும்10 நாட்களுக்குள் சரிசெய்யப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது சரிசெய்யாத பட்சத்தில் பேருந்தின் சேவைக்கு நிரந்தர தடைஉத்தரவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பற்ற அரச பேருந்து சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை போக்குவரத்து குறைபாடுகளை கொண்ட அரச பேருந்தின் சாரதியின் அனுமதிப்பத்திரம் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சீரமைக்காவிடில் பேருந்துக்கு நிரந்தர தடை உத்தரவு வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.நேற்றயதினம் யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலைக்கு சொந்தமான பேருந்தின் சாரதிக்கே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பொதுப்போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டுவரும் அரச தனியார் பேருந்துகள் நேற்றயதினம் வவுனியா மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.இதன்போது பேருந்துகளில் பல்வேறு குறைபாடுகள் உள்ளமை அவதானிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த பேருந்தின் சாரதிகளுக்கு பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.மேலும் வவுனியாசாலைக்கு சொந்தமான அரச பேருந்து ஒன்றில் பல்வேறு குறைபாடுகள் அவதானிக்கப்பட்ட நிலையில் அந்த சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் போக்குவரத்து பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் தற்காலிகபத்திரம் வழங்கப்பட்டுள்ளது.இதேவேளை குறித்த பேருந்தில் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள் எதிர்வரும்10 நாட்களுக்குள் சரிசெய்யப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது சரிசெய்யாத பட்சத்தில் பேருந்தின் சேவைக்கு நிரந்தர தடைஉத்தரவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.