• Sep 20 2024

நாவலர் மண்டப வளாகத்தில் இருந்து தொல்பொருள் திணைக்களத்தினரை வெளியேறுமாறு ஆளுநர் பணிப்புரை! SamugamMedia

Tamil nila / Mar 26th 2023, 4:55 pm
image

Advertisement

யாழ். நல்லூர் நாவலர் மணிமண்டப வளாகத்தில் இருக்கும்  தொல்பொருள் திணைக் களத்தினரை வெளியேறுமாறு வடமாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளதாக அறியக்கிடைத்தது.


குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,


யாழ். நல்லூர் நாவலர் மணி மண்டபம் அமைந்துள்ள காணி இந்து கலாச்சார திணைக்களத்திற்கு சொந்தமாக காணப்படுவதால் அவர்களிடம்  கையளிப்பதற்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.


இந்நிலையில் நாவலர் மண்டபத்தின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து மாநகர சபையை விளக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கிய நிலையில் தொல்பொருள் திணைக்களத்தினரையும் அங்கிருந்து வெளியேறும்  ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.


அங்கிருந்து வெளியேறும் தொல்பொருள் திணைக்களத்தினர் தமது பொருட்களை பிறிதொரு இடத்தை தேர்வு செய்து காட்சி படுத்துவதற்கு  நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பணிபுரி விடுக்கப்பட்டுள்ளது.

நாவலர் மண்டப வளாகத்தில் இருந்து தொல்பொருள் திணைக்களத்தினரை வெளியேறுமாறு ஆளுநர் பணிப்புரை SamugamMedia யாழ். நல்லூர் நாவலர் மணிமண்டப வளாகத்தில் இருக்கும்  தொல்பொருள் திணைக் களத்தினரை வெளியேறுமாறு வடமாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளதாக அறியக்கிடைத்தது.குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,யாழ். நல்லூர் நாவலர் மணி மண்டபம் அமைந்துள்ள காணி இந்து கலாச்சார திணைக்களத்திற்கு சொந்தமாக காணப்படுவதால் அவர்களிடம்  கையளிப்பதற்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.இந்நிலையில் நாவலர் மண்டபத்தின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து மாநகர சபையை விளக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கிய நிலையில் தொல்பொருள் திணைக்களத்தினரையும் அங்கிருந்து வெளியேறும்  ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.அங்கிருந்து வெளியேறும் தொல்பொருள் திணைக்களத்தினர் தமது பொருட்களை பிறிதொரு இடத்தை தேர்வு செய்து காட்சி படுத்துவதற்கு  நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பணிபுரி விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement