மனிதபுதைகுழிகளுக்கு சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் இரண்டாவது நாளாக பளையில் முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மற்றும் இலங்கையின் வடக்கு - கிழக்கு மண்ணில் உள்ள மனித புதை குழிக்குளுக்கானதும நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம், கடந்த 29ஆம் திகதி ஆரம்பமாகியது.
வடக்கு -கிழக்கு முழுவதிலும் பரந்ததாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினமும் இன்றும் பளையில் பல மக்கள் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவாக கையெழுத்திட்டனர்.
கையெழுத்து போராட்டமானது தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருவதோடு இன்றைய தினம் கையெழுத்து போராட்டத்தில் பளை பிரதேச சபை உறுப்பினர் ஈஸ்வரன் டாயாளினி மற்றும் சுபாஸ்கரன் சுஜீபா மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் கணைச்செல்வன் மற்றும் பொதுமக்கள் மற்றும் சகோதர மொழியினத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம்; தொடர்ச்சியாக பளையில் முன்னெடுப்பு மனிதபுதைகுழிகளுக்கு சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் இரண்டாவது நாளாக பளையில் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மற்றும் இலங்கையின் வடக்கு - கிழக்கு மண்ணில் உள்ள மனித புதை குழிக்குளுக்கானதும நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம், கடந்த 29ஆம் திகதி ஆரம்பமாகியது. வடக்கு -கிழக்கு முழுவதிலும் பரந்ததாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினமும் இன்றும் பளையில் பல மக்கள் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவாக கையெழுத்திட்டனர். கையெழுத்து போராட்டமானது தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருவதோடு இன்றைய தினம் கையெழுத்து போராட்டத்தில் பளை பிரதேச சபை உறுப்பினர் ஈஸ்வரன் டாயாளினி மற்றும் சுபாஸ்கரன் சுஜீபா மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் கணைச்செல்வன் மற்றும் பொதுமக்கள் மற்றும் சகோதர மொழியினத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.