• Mar 29 2025

உளநல பாதிப்பால் தவறான முடிவெடுப்போருக்காக ஆரம்பிக்கப்பட்ட 'ரம்மிய இல்லம்'! வைத்திய அதிகாரியின் அறிவிப்பு

Chithra / Mar 26th 2025, 3:09 pm
image


கிண்ணியா பிரதேசத்தில், 2024 ஆம் ஆண்டு, தங்களை தாங்களே பல முறைகளில், துன்புறுத்தி தற்கொலை செய்ய முயற்சித்த 71 பேர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறார்கள் என கிண்ணியா தள வைத்தியசாலையின் உளநல ஆரோக்கிய வைத்திய அதிகாரி ஏ. கே. எம். நஸ்மி தெரிவித்தார். 

கிண்ணியா தள வைத்தியசாலையில் உளநல சிகிச்சைக்காக, 'ரம்மிய இல்லம்' என்ற பெயரில் பிரிவு ஒன்று இன்று(26) புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தப் பிரிவு, வைத்தியசாலையின், வைத்திய அத்தியேட்சகர் D. H. நயன சந்திரதாசவினால் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது, அவர் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

இவ்வாறு உளநலம் பாதிக்கப்பட்டவர்கள் 20 தொடக்கம் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், அவர்கள், இன்றைய நவீன சூழலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களே என்றும் தெரிவித்தார்.

போதை பொருள் பாவனை, இளம் வயது திருமணத்தில் பின்னர் ஏற்படுகின்ற பிரச்சினைகள், சமூக ஊடகங்களின் தாக்கங்கள் இவர்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிருப்பதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

கிண்ணியா பிரதேசத்தைப் பொறுத்தவரை, 2021 ஆண்டை விட, 2024 ஆண்டு உளநல சேவையை பெற எமது பிரிவுக்கு வருகை தந்தவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து இருப்பது ஒரு முக்கியமான அம்சமாகும்.

2021 ஆண்டு 40 பேர் இங்கு சிகிச்சை பெற வந்தனர். 2024 ஆண்டு, 130 க்கும் மேற்பட்டவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற்றிருக்கின்றனர். 

விஞ்ஞான ரீதியாக சிகிச்சை அளித்து, உளநலம் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்க முடியும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பது இதன் மூலம் தெளிவாகின்றது. இந்த விடயம் ஒரு மகிழ்ச்சிகரமான விடயமாகும்.

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெறுவதற்காகவே அந்த பிரிவை தற்போது நாங்கள் ரம்மிய இல்லமென மாற்றியிருக்கிறோம்.

எனவே, இவ்வாறான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே அவதானித்து, இங்கு கொண்டு வந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களை, குணமாக்க முடியும் என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதோடு, பாடசாலைகளும் இதனை அறிந்திருப்பது அவசியமாகும் என்றும் அவர், மேலும் தெரிவித்தார்.


உளநல பாதிப்பால் தவறான முடிவெடுப்போருக்காக ஆரம்பிக்கப்பட்ட 'ரம்மிய இல்லம்' வைத்திய அதிகாரியின் அறிவிப்பு கிண்ணியா பிரதேசத்தில், 2024 ஆம் ஆண்டு, தங்களை தாங்களே பல முறைகளில், துன்புறுத்தி தற்கொலை செய்ய முயற்சித்த 71 பேர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறார்கள் என கிண்ணியா தள வைத்தியசாலையின் உளநல ஆரோக்கிய வைத்திய அதிகாரி ஏ. கே. எம். நஸ்மி தெரிவித்தார். கிண்ணியா தள வைத்தியசாலையில் உளநல சிகிச்சைக்காக, 'ரம்மிய இல்லம்' என்ற பெயரில் பிரிவு ஒன்று இன்று(26) புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்தப் பிரிவு, வைத்தியசாலையின், வைத்திய அத்தியேட்சகர் D. H. நயன சந்திரதாசவினால் திறந்து வைக்கப்பட்டது.இதன்போது, அவர் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,இவ்வாறு உளநலம் பாதிக்கப்பட்டவர்கள் 20 தொடக்கம் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், அவர்கள், இன்றைய நவீன சூழலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களே என்றும் தெரிவித்தார்.போதை பொருள் பாவனை, இளம் வயது திருமணத்தில் பின்னர் ஏற்படுகின்ற பிரச்சினைகள், சமூக ஊடகங்களின் தாக்கங்கள் இவர்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிருப்பதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.கிண்ணியா பிரதேசத்தைப் பொறுத்தவரை, 2021 ஆண்டை விட, 2024 ஆண்டு உளநல சேவையை பெற எமது பிரிவுக்கு வருகை தந்தவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து இருப்பது ஒரு முக்கியமான அம்சமாகும்.2021 ஆண்டு 40 பேர் இங்கு சிகிச்சை பெற வந்தனர். 2024 ஆண்டு, 130 க்கும் மேற்பட்டவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற்றிருக்கின்றனர். விஞ்ஞான ரீதியாக சிகிச்சை அளித்து, உளநலம் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்க முடியும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பது இதன் மூலம் தெளிவாகின்றது. இந்த விடயம் ஒரு மகிழ்ச்சிகரமான விடயமாகும்.மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெறுவதற்காகவே அந்த பிரிவை தற்போது நாங்கள் ரம்மிய இல்லமென மாற்றியிருக்கிறோம்.எனவே, இவ்வாறான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே அவதானித்து, இங்கு கொண்டு வந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களை, குணமாக்க முடியும் என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதோடு, பாடசாலைகளும் இதனை அறிந்திருப்பது அவசியமாகும் என்றும் அவர், மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement