• May 17 2024

யாழ். கடற்பரப்புக்குள் கடற்படையினரிடம் சிக்கிய 10 இந்திய மீனவர்கள்...!

Chithra / Jan 16th 2024, 8:46 am
image

Advertisement

 


இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேர்  நேற்று (15) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டம், பருத்தித்துறையை அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 10 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்திய ட்ரோலர் படகும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

கைதான 10 மீனவர்களும் மயிலிட்டியில் வைத்து யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.


யாழ். கடற்பரப்புக்குள் கடற்படையினரிடம் சிக்கிய 10 இந்திய மீனவர்கள்.  இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேர்  நேற்று (15) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் மாவட்டம், பருத்தித்துறையை அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 10 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.அவர்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்திய ட்ரோலர் படகும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.கைதான 10 மீனவர்களும் மயிலிட்டியில் வைத்து யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement