தென்மேற்கு சீனாவின் சோங்கிங்கில் பெய்து வரும் கனமழை காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் மாயமாகியுள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சோங்கிங் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் 130,000க்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனமழையின் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை சிச்சுவானில் வெள்ளம் காரணமாக 85 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்புக் குழுவினர் விரைந்து படகு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை சம்பவ இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சீனாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை. ஒரே நாளில் 15 பேர் உயிரிழப்பு.samugammedia தென்மேற்கு சீனாவின் சோங்கிங்கில் பெய்து வரும் கனமழை காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் மாயமாகியுள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சோங்கிங் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் 130,000க்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கனமழையின் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அதேவேளை சிச்சுவானில் வெள்ளம் காரணமாக 85 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்புக் குழுவினர் விரைந்து படகு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை சம்பவ இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.