• Jun 04 2025

தாய்லாந்து அழகி உலக அழகியானது எப்படி? அந்த ஒரு கேள்வி! பதில் என்ன தெரியுமா?

shanuja / Jun 2nd 2025, 1:28 pm
image


உலக அழகியை முடிவு செய்ய கேட்கப்பட்ட கேள்விகளில் முக்கியமான கேள்வியாக “நீங்கள் ஏன் உலக அழகி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?" என்ற கேள்விக்கு சிறப்பான பதிலைக் கூறி  2025 ஆம் அண்டுக்கான உலக அழகி ஆகினார் ஒபல் சுஷாதா. 



இந்தியாவின் ஹைதராபாத்தில் மே 31 மாலை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு  உலக அழகிப் போட்டியில், 108 அழகிகள் போட்டியிட்டனர். ஒவ்வொரு சுற்றுக்களைக் கடந்து காலிறுதிப்போட்டிக்கு 40பேர் தெரிவாகியிருந்தனர்.  காலிறுதிக்குப் பிறகு, ஒவ்வொரு கண்டத்திலும் முதல் 5 இடங்களைப் பிடித்த நபர்கள் இரண்டாம் சுற்றுக்கு அனுப்பப்பட்டனர்.


அதன்பிறகு இரண்டாம் கட்டத்தில் ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட இரு அழகிகள் அடுத்த கட்டத்திற்கு அனுப்பப்பட்டனர். அதன் பின்னர் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், கண்டத்திற்கு ஒருவர் என நால்வர் தேர்வு செய்யப்பட்டு இறுதிப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


இறுதிப் போட்டியாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி தான்  உலக அழகியை தேர்ந்தெடுக்கும் வினாக்களில் முக்கியமான ஒரு கேள்வியாக, "நீங்கள் ஏன் உலக அழகி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?" எனக் கேட்கப்பட்டது. இந்த சுற்றில் மார்டினிக், எத்தியோப்பியா, போலந்து மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த அழகிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.


இறுதிக் கேள்வியாக “இந்தப் பயணம் உங்களுக்கு உண்மை மற்றும் தனிப்பட்ட பொறுப்பு பற்றி என்ன கற்றுக் கொடுத்தது?" என்று சோனு சூட், மிஸ் தாய்லாந்திடம் கேள்வி எழுப்பினார்.


பதில் கூறிய அவர், “இது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. மிஸ் வேர்ல்ட் போட்டியில் இருந்து நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயம் உண்மையை எப்படி ஏற்றுக்கொள்வது என்பதுதான். எனக்காகவும், பிற பெண்களுக்காகவும், இந்த அரங்கில் உள்ள அனைவருக்கும் நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய விஷயம், நம் வாழ்வில் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதுதான்.


ஏனென்றால் யாராக இருந்தாலும், எவ்வளவு வயதானவராக இருந்தாலும், வாழ்க்கையில் உங்கள் நிலை என்னவாக இருந்தாலும், உங்கள் அருகில் ஒருவர் இருக்கிறார். அது ஒரு குழந்தையாகவோ, பெரியவராக இருக்கலாம் அல்லது உங்கள் பெற்றோராக இருக்கலாம், அவர்கள் உங்களை ஒரு முன்மாதிரியாகப் பார்க்கிறார்கள். மற்றவர்களை வழிநடத்த சிறந்த வழி, கருணையுடன் அவர்களை அணுகுவதாகும். அதுதான் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் உலகிற்கும் நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயம்," என்று ஒபல் சுஷாதா சௌசி பதிலளித்தார்.


இறுதிச் சுற்றில் இந்த கேள்விக் அவர் அளித்த பதில்களின் அடிப்படையிலேயே  தாய்லாந்தைச் சேர்ந்த ஒபல் சுஷாதா சௌசி உலக அழகிப் பட்டத்தை வென்றார். உலக அழகிப் போட்டியில் தாய்லாந்து பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

தாய்லாந்து அழகி உலக அழகியானது எப்படி அந்த ஒரு கேள்வி பதில் என்ன தெரியுமா உலக அழகியை முடிவு செய்ய கேட்கப்பட்ட கேள்விகளில் முக்கியமான கேள்வியாக “நீங்கள் ஏன் உலக அழகி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்" என்ற கேள்விக்கு சிறப்பான பதிலைக் கூறி  2025 ஆம் அண்டுக்கான உலக அழகி ஆகினார் ஒபல் சுஷாதா. இந்தியாவின் ஹைதராபாத்தில் மே 31 மாலை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு  உலக அழகிப் போட்டியில், 108 அழகிகள் போட்டியிட்டனர். ஒவ்வொரு சுற்றுக்களைக் கடந்து காலிறுதிப்போட்டிக்கு 40பேர் தெரிவாகியிருந்தனர்.  காலிறுதிக்குப் பிறகு, ஒவ்வொரு கண்டத்திலும் முதல் 5 இடங்களைப் பிடித்த நபர்கள் இரண்டாம் சுற்றுக்கு அனுப்பப்பட்டனர்.அதன்பிறகு இரண்டாம் கட்டத்தில் ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட இரு அழகிகள் அடுத்த கட்டத்திற்கு அனுப்பப்பட்டனர். அதன் பின்னர் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், கண்டத்திற்கு ஒருவர் என நால்வர் தேர்வு செய்யப்பட்டு இறுதிப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இறுதிப் போட்டியாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி தான்  உலக அழகியை தேர்ந்தெடுக்கும் வினாக்களில் முக்கியமான ஒரு கேள்வியாக, "நீங்கள் ஏன் உலக அழகி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்" எனக் கேட்கப்பட்டது. இந்த சுற்றில் மார்டினிக், எத்தியோப்பியா, போலந்து மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த அழகிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.இறுதிக் கேள்வியாக “இந்தப் பயணம் உங்களுக்கு உண்மை மற்றும் தனிப்பட்ட பொறுப்பு பற்றி என்ன கற்றுக் கொடுத்தது" என்று சோனு சூட், மிஸ் தாய்லாந்திடம் கேள்வி எழுப்பினார்.பதில் கூறிய அவர், “இது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. மிஸ் வேர்ல்ட் போட்டியில் இருந்து நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயம் உண்மையை எப்படி ஏற்றுக்கொள்வது என்பதுதான். எனக்காகவும், பிற பெண்களுக்காகவும், இந்த அரங்கில் உள்ள அனைவருக்கும் நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய விஷயம், நம் வாழ்வில் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதுதான்.ஏனென்றால் யாராக இருந்தாலும், எவ்வளவு வயதானவராக இருந்தாலும், வாழ்க்கையில் உங்கள் நிலை என்னவாக இருந்தாலும், உங்கள் அருகில் ஒருவர் இருக்கிறார். அது ஒரு குழந்தையாகவோ, பெரியவராக இருக்கலாம் அல்லது உங்கள் பெற்றோராக இருக்கலாம், அவர்கள் உங்களை ஒரு முன்மாதிரியாகப் பார்க்கிறார்கள். மற்றவர்களை வழிநடத்த சிறந்த வழி, கருணையுடன் அவர்களை அணுகுவதாகும். அதுதான் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் உலகிற்கும் நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயம்," என்று ஒபல் சுஷாதா சௌசி பதிலளித்தார்.இறுதிச் சுற்றில் இந்த கேள்விக் அவர் அளித்த பதில்களின் அடிப்படையிலேயே  தாய்லாந்தைச் சேர்ந்த ஒபல் சுஷாதா சௌசி உலக அழகிப் பட்டத்தை வென்றார். உலக அழகிப் போட்டியில் தாய்லாந்து பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

Advertisement

Advertisement

Advertisement