தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 37ஆவது நினைவு நாளை நினைவுகூரும் முகமாக, பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டமாக உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டது.
ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னலமின்றி தன்னை அர்ப்பணித்த அன்னை பூபதியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், இந்நிகழ்வு நடத்தப்பட்டது.
லண்டனின் மைய பகுதியில் அமைந்துள்ள டவுனிங் வீதி 10ஆம் எண்ணிலுள்ள பிரதமர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில், இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், ஈழத்தமிழருக்கான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தின் மூலம், பிரித்தானிய அரசின் கவனத்தை ஈர்த்து, சர்வதேச மேடைகளில் தமிழருக்கான உரிமை விவகாரம் மீண்டும் பேசப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், 'அன்னை பூபதி ஒரு மகத்தான தியாகத்தின் அடையாளம். அவரது நினைவ நாளில்,அவரது இலட்சியங்களை நிலைநாட்டும் விதமாக
, உலக சக்திகளை நம்மை கேட்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது' என தெரிவித்தார்.
அன்னை பூபதி நினைவாக பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் முன்னெடுப்பு தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 37ஆவது நினைவு நாளை நினைவுகூரும் முகமாக, பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டமாக உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டது.ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னலமின்றி தன்னை அர்ப்பணித்த அன்னை பூபதியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், இந்நிகழ்வு நடத்தப்பட்டது. லண்டனின் மைய பகுதியில் அமைந்துள்ள டவுனிங் வீதி 10ஆம் எண்ணிலுள்ள பிரதமர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில், இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், ஈழத்தமிழருக்கான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தின் மூலம், பிரித்தானிய அரசின் கவனத்தை ஈர்த்து, சர்வதேச மேடைகளில் தமிழருக்கான உரிமை விவகாரம் மீண்டும் பேசப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், 'அன்னை பூபதி ஒரு மகத்தான தியாகத்தின் அடையாளம். அவரது நினைவ நாளில்,அவரது இலட்சியங்களை நிலைநாட்டும் விதமாக, உலக சக்திகளை நம்மை கேட்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது' என தெரிவித்தார்.