பொசன் தினத்தை முன்னிட்டு மூதூர் 64 ஆம் கட்டை ரஜ மஹா விகாரை வளாகத்தில் மதிய உணவு, ஐஸ்கிறீம் தன்சல் என்பன இன்று வழங்கப்பட்டன.
மூதூர் -64ஆம் கட்டை ரஜ மஹா விகாரையின் விகாராதிபதி பலல்லே ரத்தன சார தேரர் தலைமையில் இவ் பொசன் தன்சல் வழங்கி வைக்கப்பட்டன.
இன நல்லிணக்க அடிப்படையில் வழங்கப்பட்ட இவ் தன்சல் நிகழ்வில் மூவின மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு வைகாசி விசாக பெளர்ணமி தினத்தில் மஸ்கெலியா நகரில் முச்சக்கர வண்டி சாரதிகளினால் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் மஸ்கெலியா சுமனாராம விகாரையின் பௌத்த மத தேரர், மஸ்கெலியா ராணி தோட்ட அம்மன் கோவில் இந்து சமய பூசகர் மற்றும் மஸ்கெலியா இஸ்லாமிய பள்ளிவாயில் மத மௌலவி ஆகியோரின் மத அனுஸ்டிப்பிக்கு பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் பிரதேச சபை செயலாளர் எஸ்.ராஜவீரன் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பொசன் தினத்தை முன்னிட்டு ஐஸ்கிறீம் தன்சல் பொசன் தினத்தை முன்னிட்டு மூதூர் 64 ஆம் கட்டை ரஜ மஹா விகாரை வளாகத்தில் மதிய உணவு, ஐஸ்கிறீம் தன்சல் என்பன இன்று வழங்கப்பட்டன.மூதூர் -64ஆம் கட்டை ரஜ மஹா விகாரையின் விகாராதிபதி பலல்லே ரத்தன சார தேரர் தலைமையில் இவ் பொசன் தன்சல் வழங்கி வைக்கப்பட்டன.இன நல்லிணக்க அடிப்படையில் வழங்கப்பட்ட இவ் தன்சல் நிகழ்வில் மூவின மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.அத்தோடு வைகாசி விசாக பெளர்ணமி தினத்தில் மஸ்கெலியா நகரில் முச்சக்கர வண்டி சாரதிகளினால் அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்வில் மஸ்கெலியா சுமனாராம விகாரையின் பௌத்த மத தேரர், மஸ்கெலியா ராணி தோட்ட அம்மன் கோவில் இந்து சமய பூசகர் மற்றும் மஸ்கெலியா இஸ்லாமிய பள்ளிவாயில் மத மௌலவி ஆகியோரின் மத அனுஸ்டிப்பிக்கு பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்வில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் பிரதேச சபை செயலாளர் எஸ்.ராஜவீரன் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.