• Sep 19 2024

நாட்டில் 13வந்தால் தமிழீழம் மலரும்- விமல் எம்.பி எச்சரிக்கை!

Sharmi / Jan 28th 2023, 10:15 am
image

Advertisement

நாட்டில் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபடும். தமிழீழம் மலர வழிவகுக்கும் நாடெங்கும் இரத்த ஆறு ஓடும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவம்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று மேலும் தெரிவித்ததாவது:-

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட் டத்தை முழுமையாக நடைமுறைப்படுத் தினால் நாடு பிளவுபட்டே தீரும். அது தமிழீழம் மலர வழிவகுக்கும். நாடெங்கும் மீண்டும் இரத்த ஆறு ஓடும். இப்படியான நிலைமை ஏற்படக்கூடும் என்று ஜனாதிபதிக்கும் தெரியும். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதைப் பல தடவைகள் நாம் தெரிவித்துவிட்டோம். தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற மமதையுடன் ஒவ்வொரு நாளும் வாய்க்கு வந்த மாதிரி ரணில் விக்கிரமசிங்க கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

சிங்கள மக்களையும், தமிழ் மக்களையும். முஸ்லிம் மக்களையும் ஏமாற்றும் நோக்குடனேயே ஜனாதிபதி செயற்படு கின்றார். ஆனால், சிங்கள மக்கள் எப்போதும் விழிப்பாகவே இருக்கின்றார்கள். ஜனாதிபதி நடைமுறைக்குச் சாத்தியமில்லாத இப்படியான கருத்துக்களை வெளியிட்டுத் தனது பதவிக் காலத்தை இழுத்தடிப்பார் என்று தெரிந்துதான் அவரின் சர்வகட்சிக் கூட்டத்தை நாம் புறக்கணித்தோம்- என்றார்.

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதால் நாடு பிளவுபடாது. எனவே, இந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யாமல் இருக்க வேண்டுமானால் யாராவது நாடாளுமன்றத்தில் 22 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து 13 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யவேண்டும்' என்று நேற்றுமுன்தினம் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கி ரமசிங்க தெரிவித்திருந்தார். இதைய டுத்தே விமல் வீரவன்ஸ மேற்படி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


நாட்டில் 13வந்தால் தமிழீழம் மலரும்- விமல் எம்.பி எச்சரிக்கை நாட்டில் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபடும். தமிழீழம் மலர வழிவகுக்கும் நாடெங்கும் இரத்த ஆறு ஓடும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவம்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் நேற்று மேலும் தெரிவித்ததாவது:-அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட் டத்தை முழுமையாக நடைமுறைப்படுத் தினால் நாடு பிளவுபட்டே தீரும். அது தமிழீழம் மலர வழிவகுக்கும். நாடெங்கும் மீண்டும் இரத்த ஆறு ஓடும். இப்படியான நிலைமை ஏற்படக்கூடும் என்று ஜனாதிபதிக்கும் தெரியும். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதைப் பல தடவைகள் நாம் தெரிவித்துவிட்டோம். தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற மமதையுடன் ஒவ்வொரு நாளும் வாய்க்கு வந்த மாதிரி ரணில் விக்கிரமசிங்க கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.சிங்கள மக்களையும், தமிழ் மக்களையும். முஸ்லிம் மக்களையும் ஏமாற்றும் நோக்குடனேயே ஜனாதிபதி செயற்படு கின்றார். ஆனால், சிங்கள மக்கள் எப்போதும் விழிப்பாகவே இருக்கின்றார்கள். ஜனாதிபதி நடைமுறைக்குச் சாத்தியமில்லாத இப்படியான கருத்துக்களை வெளியிட்டுத் தனது பதவிக் காலத்தை இழுத்தடிப்பார் என்று தெரிந்துதான் அவரின் சர்வகட்சிக் கூட்டத்தை நாம் புறக்கணித்தோம்- என்றார்.13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதால் நாடு பிளவுபடாது. எனவே, இந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யாமல் இருக்க வேண்டுமானால் யாராவது நாடாளுமன்றத்தில் 22 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து 13 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யவேண்டும்' என்று நேற்றுமுன்தினம் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கி ரமசிங்க தெரிவித்திருந்தார். இதைய டுத்தே விமல் வீரவன்ஸ மேற்படி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement