• Sep 29 2024

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு ஜனாதிபதியிடம் இருந்து சென்ற தகவல்..!

Chithra / Jan 23rd 2024, 9:32 am
image

Advertisement


இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அணிசேரா மாநாட்டுக்காக உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் தற்போது ரணில் தங்கியுள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவி தொடர்பான தேர்தல் முடிவுகள் தொடர்பில் அவருக்கு தெரியப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே சிறீதரனுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை(21) பிற்பகல் 3 மணியளவில் தொலைபேசி அழைப்பெடுத்து ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர்கள், பெரும்பான்மைக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறீதரனுக்குத் தமது வாழ்த்தைத் தெரிவித்துள்ளனர்.


இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு ஜனாதிபதியிடம் இருந்து சென்ற தகவல். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.அணிசேரா மாநாட்டுக்காக உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் தற்போது ரணில் தங்கியுள்ளார்.தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவி தொடர்பான தேர்தல் முடிவுகள் தொடர்பில் அவருக்கு தெரியப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே சிறீதரனுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை(21) பிற்பகல் 3 மணியளவில் தொலைபேசி அழைப்பெடுத்து ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.இதேவேளை, அமைச்சர்கள், பெரும்பான்மைக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறீதரனுக்குத் தமது வாழ்த்தைத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement