கொழும்பு, ராஜகிரிய பகுதியில் வைத்து சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட SUV வாகனம் ஒன்று வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (09) கைப்பற்றப்பட்டது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வாகனம் சட்டவிரோதமாக இலங்கைக்கு பாகங்களாகக் கொண்டுவரப்பட்டதா அல்லது திருடப்பட்ட வாகன உதிரிபாகங்களைப் பொருத்துவதற்குப் பயன்படுத்தியதா என்ற சந்தேகத்தின் பேரில் வாகனம் கைப்பற்றப்பட்டது.
சந்தேகத்திற்குரிய வாகனத்தை ஓட்டிச் சென்ற இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கடுவலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த வாரம் ராஜகிரியவில் கைப்பற்றப்பட்ட வாகனத்தின் அதே இலக்கத் தகடு கொண்ட சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட SUV வாகனத்தை வைத்திருந்ததற்காக 2019 ஆம் ஆண்டில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராஜகிரியவில் மீட்கப்பட்ட சட்டவிரோத சொகுசு வாகனம் கொழும்பு, ராஜகிரிய பகுதியில் வைத்து சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட SUV வாகனம் ஒன்று வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (09) கைப்பற்றப்பட்டது.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த வாகனம் சட்டவிரோதமாக இலங்கைக்கு பாகங்களாகக் கொண்டுவரப்பட்டதா அல்லது திருடப்பட்ட வாகன உதிரிபாகங்களைப் பொருத்துவதற்குப் பயன்படுத்தியதா என்ற சந்தேகத்தின் பேரில் வாகனம் கைப்பற்றப்பட்டது.சந்தேகத்திற்குரிய வாகனத்தை ஓட்டிச் சென்ற இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் கடுவலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.இந்த வாரம் ராஜகிரியவில் கைப்பற்றப்பட்ட வாகனத்தின் அதே இலக்கத் தகடு கொண்ட சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட SUV வாகனத்தை வைத்திருந்ததற்காக 2019 ஆம் ஆண்டில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.