• Jun 17 2025

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Thansita / Jun 15th 2025, 11:21 pm
image

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே  மோதல் நிலை தொடர்ந்து வருவதால் , இரு நாடுகளிலும் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை இலங்கை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் பாதுகாப்பு தொடர்பாக ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால், இலங்கைத் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் என்று வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

மேலும், அங்கு வசிக்கும்  இலங்கையர்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதில் சிரமம் இருப்பின் அவர்கள் வெளியுறவு அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டு விசாரிக்கலாம் என்றும் அவர் கூறினார். 

அத்தோடு இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் இரண்டு இலங்கைப் பெண்கள் சிறிய காயங்களுக்கு ஆளாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார தெரிவித்தார். 

இஸ்ரேலிய நகரங்களான பெத் யாம் மற்றும் ராமத் கான் மீது இன்றையதினம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது

இத்தாக்குதலில்  தாக்குதல்களால் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டதில் இவர்கள் காயமடைந்ததாக தூதர் குறிப்பிட்டார். 

இந்த இரு பெண்களின் நலனை உறுதிப்படுத்த, தூதர் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். 

மேலும் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட 128 பேர் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள், அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளன.

இத் தாக்குதல்களில் சுமார் 900 பேர் காயமடைந்துள்ளதாகவும், இறந்தவர்களில் இரண்டு மாத குழந்தையும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மறுபுறம், ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால் இஸ்ரேலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக இஸ்ரேலிய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் நேற்றையதினம் இஸ்ரேலில் உள்ள பெத் யாம் பகுதியில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கடுமையாக சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

இதற்கிடையில், ஈரானில் உள்ள ஆயுத உற்பத்தி மையங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் அப்பகுதிகளை விட்டு வெளியேறுமாறும் மறு அறிவித்தல் வரும் வரை அந்தப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும்  இஸ்ரேல் எச்சரித்துள்ளது. 

இந்த எச்சரிக்கை, ஈரான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்பதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது. 

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே  மோதல் நிலை தொடர்ந்து வருவதால் , இரு நாடுகளிலும் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை இலங்கை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் பாதுகாப்பு தொடர்பாக ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால், இலங்கைத் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் என்று வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.மேலும், அங்கு வசிக்கும்  இலங்கையர்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதில் சிரமம் இருப்பின் அவர்கள் வெளியுறவு அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டு விசாரிக்கலாம் என்றும் அவர் கூறினார். அத்தோடு இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் இரண்டு இலங்கைப் பெண்கள் சிறிய காயங்களுக்கு ஆளாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார தெரிவித்தார். இஸ்ரேலிய நகரங்களான பெத் யாம் மற்றும் ராமத் கான் மீது இன்றையதினம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதுஇத்தாக்குதலில்  தாக்குதல்களால் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டதில் இவர்கள் காயமடைந்ததாக தூதர் குறிப்பிட்டார். இந்த இரு பெண்களின் நலனை உறுதிப்படுத்த, தூதர் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட 128 பேர் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள், அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளன.இத் தாக்குதல்களில் சுமார் 900 பேர் காயமடைந்துள்ளதாகவும், இறந்தவர்களில் இரண்டு மாத குழந்தையும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மறுபுறம், ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால் இஸ்ரேலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக இஸ்ரேலிய அரசு தெரிவித்துள்ளது.மேலும் நேற்றையதினம் இஸ்ரேலில் உள்ள பெத் யாம் பகுதியில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கடுமையாக சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதுஇதற்கிடையில், ஈரானில் உள்ள ஆயுத உற்பத்தி மையங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் அப்பகுதிகளை விட்டு வெளியேறுமாறும் மறு அறிவித்தல் வரும் வரை அந்தப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும்  இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கை, ஈரான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்பதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement