• Sep 19 2024

அம்பாறையில் தபால் மூல வாக்கு சான்றிதழ் தொடர்பில் அலுவலர்களுக்கு செயலமர்வு..!

Sharmi / Aug 28th 2024, 2:33 pm
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்குச் சான்றிதழ் அலுவலர்களுக்கான பயிற்சித் திட்டம் அம்பாறை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்டச் செயலாளருமான சிந்தக அபேவிக்ரம தலைமையில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையானது, அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கசுன் ஸ்ரீநாத் அத்தநாயக்கவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

இதன்போது  அம்பாறை மேலதிக மாவட்ட செயலாளர் எஸ். ஜெகராஜன் கலந்து கொண்டதுடன் 186 சான்றிதழ் பெற்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில்  பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் , மற்றும் மாவட்ட செயலக துறைசாா் உத்தியோகத்தர்கள், இராணுவம், பொலிஸ், சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், தேர்தல் அலுவலக அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டனர்.



அம்பாறையில் தபால் மூல வாக்கு சான்றிதழ் தொடர்பில் அலுவலர்களுக்கு செயலமர்வு. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்குச் சான்றிதழ் அலுவலர்களுக்கான பயிற்சித் திட்டம் அம்பாறை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்டச் செயலாளருமான சிந்தக அபேவிக்ரம தலைமையில் நடைபெற்றது.அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையானது, அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கசுன் ஸ்ரீநாத் அத்தநாயக்கவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.இதன்போது  அம்பாறை மேலதிக மாவட்ட செயலாளர் எஸ். ஜெகராஜன் கலந்து கொண்டதுடன் 186 சான்றிதழ் பெற்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில்  பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் , மற்றும் மாவட்ட செயலக துறைசாா் உத்தியோகத்தர்கள், இராணுவம், பொலிஸ், சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், தேர்தல் அலுவலக அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement