• Apr 27 2024

சவால்களை எதிர்கொண்டு உருவாகியுள்ள எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து நன்மைகளை பெற வேண்டும்! - அமைச்சர் டக்ளஸ்

Chithra / Mar 29th 2024, 5:41 pm
image

Advertisement


பல்வேறு நடைமுறை ரீதியான சவால்களை எதிர்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து பராமரித்து உச்சபட்சமான நன்மைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 

போதனா வைத்தியசாலைக் கழிவுகளை தொற்று நீக்கி பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான பொறிமுறை ஒன்றின் அவசியம் நீண்ட காலமாக உணரப்பட்டு வந்ததுடன் பல்வேறு முயற்சிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில்,  ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட இந்த எரியூட்டி, நீண்டகால எதிர்பார்ப்பிற்கான தீர்வாக அமைந்துள்ளது. இதற்காக உழைத்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று தெரிவித்தார்.

அந்தவகையில்தான் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக கோம்பயன்மணல் இந்து மயானத்தில் உருவாக்கப்பட்ட எரியூட்டி அமைப்பதற்காக எனது ஆதரவினையும் வழங்கியிருந்தேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நான் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதில் போதனா வைத்தியசாலை எதிர்கொண்டுவந்த சவால்களை அறிந்திருந்தவன் என்ற வகையிலும் பொதுமக்களின் பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்த திட்டத்தை கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நிர்மாணிப்பதற்கான ஒத்துழைப்பை வழங்கியிருந்தேன். அதனடிப்படையில் இன்று குறித்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் அமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்களை சிறப்பாக பராமரிப்பது மிகவும் அவசியமாகும். அதுமட்டுமல்லாது பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதும் முக்கியமாகும். இதற்கு பொலிஸ் காவலரண் ஒன்றையும் அமைப்பதற்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேநேரம் கடந்த காலத்தில் குறிப்பாக திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ்ப்பாண மாநகரின் முதல்வராக இருந்த காலப்பகுதியில் எமது கடும் முயற்சியின் பயனாக இந்த மயானத்தில் பொதுமக்களின் தேவைக்காக ஏற்கனவே ஒரு மின் எரியூட்டி அமைக்கப்பட்டு இன்றுவரை சிறப்பாக இயங்கிவருகின்றது.

அந்தவகையில் இந்த மயானத்தை ஒன்றியதாக ஒரு மலர்சாலையும் செயற்படுத்த வேண்டும் என கோம்பயன் மணல் இந்து மயான நிர்வாகத்தின் செயலாளர் தெரியப்படுத்தியுள்ளார். அதுவும் காலக்கிரமத்தில் அமைக்கப்படும் என நம்பகின்றேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சவால்களை எதிர்கொண்டு உருவாகியுள்ள எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து நன்மைகளை பெற வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் பல்வேறு நடைமுறை ரீதியான சவால்களை எதிர்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து பராமரித்து உச்சபட்சமான நன்மைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.யாழ்ப்பாணம், கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.இன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, போதனா வைத்தியசாலைக் கழிவுகளை தொற்று நீக்கி பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான பொறிமுறை ஒன்றின் அவசியம் நீண்ட காலமாக உணரப்பட்டு வந்ததுடன் பல்வேறு முயற்சிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.இந்நிலையில்,  ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட இந்த எரியூட்டி, நீண்டகால எதிர்பார்ப்பிற்கான தீர்வாக அமைந்துள்ளது. இதற்காக உழைத்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று தெரிவித்தார்.அந்தவகையில்தான் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக கோம்பயன்மணல் இந்து மயானத்தில் உருவாக்கப்பட்ட எரியூட்டி அமைப்பதற்காக எனது ஆதரவினையும் வழங்கியிருந்தேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.நான் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதில் போதனா வைத்தியசாலை எதிர்கொண்டுவந்த சவால்களை அறிந்திருந்தவன் என்ற வகையிலும் பொதுமக்களின் பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்த திட்டத்தை கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நிர்மாணிப்பதற்கான ஒத்துழைப்பை வழங்கியிருந்தேன். அதனடிப்படையில் இன்று குறித்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.மேலும் அமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்களை சிறப்பாக பராமரிப்பது மிகவும் அவசியமாகும். அதுமட்டுமல்லாது பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதும் முக்கியமாகும். இதற்கு பொலிஸ் காவலரண் ஒன்றையும் அமைப்பதற்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.இதேநேரம் கடந்த காலத்தில் குறிப்பாக திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ்ப்பாண மாநகரின் முதல்வராக இருந்த காலப்பகுதியில் எமது கடும் முயற்சியின் பயனாக இந்த மயானத்தில் பொதுமக்களின் தேவைக்காக ஏற்கனவே ஒரு மின் எரியூட்டி அமைக்கப்பட்டு இன்றுவரை சிறப்பாக இயங்கிவருகின்றது.அந்தவகையில் இந்த மயானத்தை ஒன்றியதாக ஒரு மலர்சாலையும் செயற்படுத்த வேண்டும் என கோம்பயன் மணல் இந்து மயான நிர்வாகத்தின் செயலாளர் தெரியப்படுத்தியுள்ளார். அதுவும் காலக்கிரமத்தில் அமைக்கப்படும் என நம்பகின்றேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement