• May 05 2024

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு...! மக்கள் குற்றச்சாட்டு...!samugammedia

Sharmi / Jan 8th 2024, 7:33 pm
image

Advertisement

வற் வரி விதிப்பினால் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதன்படி, பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், உலர் பழங்கள், இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா, டின் மீன் மற்றும் பால் சம்பா மற்றும் சம்பா அரிசி ஆகியவற்றின் விலைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட பருப்பு கிலோ ஒன்றின் விலை தற்போது 350 ரூபா தொடக்கம் 400 ரூபாவாக காணப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை தற்போது 325 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ கிரி சம்மா 300 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும், ஒரு கிலோ சம்பா 250 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சில பல்பொருள் அங்காடிகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சில பொருட்களை திறந்த சந்தை விலையை விட அதிக விலைக்கு லங்கா சதொச விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு. மக்கள் குற்றச்சாட்டு.samugammedia வற் வரி விதிப்பினால் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.இதன்படி, பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், உலர் பழங்கள், இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா, டின் மீன் மற்றும் பால் சம்பா மற்றும் சம்பா அரிசி ஆகியவற்றின் விலைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட பருப்பு கிலோ ஒன்றின் விலை தற்போது 350 ரூபா தொடக்கம் 400 ரூபாவாக காணப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை தற்போது 325 ரூபாவாக அதிகரித்துள்ளது.ஒரு கிலோ கிரி சம்மா 300 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும், ஒரு கிலோ சம்பா 250 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.சில பல்பொருள் அங்காடிகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சில பொருட்களை திறந்த சந்தை விலையை விட அதிக விலைக்கு லங்கா சதொச விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement